O Our Lord! Please Dispel My Troubles
எம்பிரானே! இடரைக் க:ளையாய்
441 நம்பனே! நவின்றேத்தவல்லார்கள்
நாதனே! நரசிங்கமதானாய்! *
உம்பர்கோனுலகேழும்அளந்தாய்
ஊழியாயினாய்! ஆழிமுன்னேந்தி *
கம்பமாகரிகோள்விடுத்தானே.
காரணா! கடலைக்கடைந்தானே! *
எம்பிரான். என்னையாளுடைத்தேனே!
ஏழையேனிடரைக்களையாயே.