Grace Me So That I May Praise Only You
உன்னையே புகழுமாறு அருள் செய்
440 வண்ணமால்வரையேகுடையாக
மாரிகாத்தவனே! மதுசூதா! *
கண்ணனே! கரிகோள்விடுத்தானே!
காரணா! களிறட்டபிரானே! *
எண்ணுவாரிடரைக்களைவானே!
ஏத்தரும்பெருங்கீர்த்தியினானே! *
நண்ணிநான்உன்னைநாள்தொறும்ஏத்தும்
நன்மையேஅருள்செய்எம்பிரானே!