Your browser does not support the audio element.
audio
567 கருப்பூரம்நாறுமோ? கமலப்பூநாறுமோ? *
திருப்பவளச்செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ? *
மருப்பொசித்தமாதவன்றன் வாய்ச்சுவையும்நாற்றமும் *
விருப்புற்றுக்கேட்கின்றேன் சொல்லாழிவெண்சங்கே. (2)
568 கடலில்பிறந்து கருதாது * பஞ்சசனன்
உடலில்வளர்ந்துபோய் ஊழியான்கைத்தலத்து
திடரில் * குடியேறித் தீயவசுரர் *
நடலைப்படமுழங்கும் தோற்றத்தாய்நற்சங்கே.
569 தடவரையின்மீதே சரற்காலசந்திரன் *
இடையுவாவில்வந்து எழுந்தாலேபோல * நீயும்
வடமதுரையார்மன்னன் வாசுதேவன்கையில் *
குடியேறிவீற்றிருந்தாய் கோலப்பெருஞ்சங்கே!
570 சந்திரமண்டலம்போல் தாமோதரன்கையில் *
அந்தரமொன்றின்றி ஏறியவன்செவியில் *
மந்திரங்கொள்வாயேபோலும் வலம்புரியே *
இந்திரனுமுன்னோடு செல்வத்துக்கேலானே.
571 உன்னோடுடனே ஒருகடலில்வாழ்வாரை *
இன்னாரினையாரென்று எண்ணுவாரில்லைகாண் *
மன்னாகிநின்ற மதுசூதன்வாயமுதம் *
பன்னாளுமுண்கின்றாய் பாஞ்சசன்னியமே!
572 போய்த்தீர்த்தமாடாதே நின்றபுணர்மருதம் *
சாய்த்தீர்த்தான்கைத்தலத்தே ஏறிக்குடிகொண்டு *
சேய்த்தீர்த்தமாய்நின்ற செங்கண்மால்தன்னுடய *
வாய்த்தீர்த்தம்பாய்ந்தாடவல்லாய் வலம்புரியே!
573 செங்கமலநாண்மலர்மேல் தேனுகருமன்னம்போல் *
செங்கண்கருமேனி வாசுதேவனுடய *
அங்கைத்தலமேறி அன்னவசஞ்செய்யும் *
சங்கரையா! உன்செல்வம் சாலவழகியதே.
574 உண்பதுசொல்லில் உலகளந்தான்வாயமுதம் *
கண்படைகொள்ளில் கடல்வண்ணன்கைத்தலத்தே *
பெண்படையாருன்மேல் பெரும்பூசல்சாற்றுகின்றார் *
பண்பலசெய்கின்றாய் பாஞ்சசன்னியமே!
575 பதினாறாமாயிரவர் தேவிமார்பார்த்திருப்ப *
மதுவாயில்கொண்டாற்போல் மாதவன்றன்வாயமுதம் *
பொதுவாகவுண்பதனைப் புக்குநீயுண்டக்கால் *
சிதையாரோ? உன்னோடு செல்வப்பெருஞ்சங்கே!
576 பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனோடும் *
வாய்ந்தபெருஞ்சுற்றமாக்கிய வண்புதுவை *
ஏய்ந்தபுகழ்ப்பட்டர்பிரான் கோதைதமிழீரைந்தும் *
ஆய்ந்தேத்தவல்லாரவரு மணுக்கரே. (2)