O Cuckoo! Call for My Lord of Vēṅkaṭam to Come.
குயிலே! என் வேங்கடவன் வரக் கூவாய்
546 வெள்ளைவிளிசங்கிடங்கையிற்கொண்ட
விமலனெனக்குருக்காட்டான் *
உள்ளம்புகுந்தென்னைநைவித்து
நாளும் உயிர்பெய்து கூத்தாட்டுக்காணும் *
கள்ளவிழ்செண்பகப்பூமலர்கோதிக்
களித்திசைபாடுங்குயிலே! *
மெள்ளவிருந்துமிழற்றிமிழற்றாது என்
வேங்கடவன்வரக்கூவாய்.