O Cuckoo! Call for My Coral-mouthed Lord to Come.
குயிலே! என் பவளவாயன் வரக் கூவாய்
545 மன்னுபெரும்புகழ்மாதவன்
மாமணிவண்ணன் மணிமுடிமைந்தன்
தன்னை * உகந்ததுகாரணமாக
என்சங்கிழக்கும்வழக்குண்டே? *
புன்னைகுருக்கத்திஞாழல்செருந்திப்
பொதும்பினில்வாழும்குயிலே! *
பன்னியெப்போதுமிருந்துவிரைந்து என்
பவளவாயன்வரக்கூவாய். (2)