The Heroine Tells Her Friend How She Sustains Herself by Chanting the Hero's Name, and Laments.
தலைவன் பெயர் கூறித் தரித்திருத்தலைத் தலைவி தோழிக்குக் கூறி இரங்கல்
2541 இருக்கார்மொழியால் நெறியிழுக்காமை * உலகளந்த
திருத்தாளிணை நிலத்தேவர்வணங்குவர் * யாமுமவா
ஒருக்காவினையொடும்எம்மொடும் நொந்துகனியின்மையின்
கருக்காய்கடிப்பவர்போல் * திருநாமச்சொல்கற்றனமே.