The Heroine Tells Her Friend How the Hero United with Her During the Night.
தலைவன் இரவிடைத் தன்னைக் கலந்தமையைத் தலைவி தோழிக்குரைத்தல்
2533 வியலிடமுண்டபிரானார் விடுத்ததிருவருளால் *
உயலிடம்பெற்றுய்ந்தம் அஞ்சலம்தோழி! * ஓர்தண் தென்றல்வந்து
அயலிடையாருமறிந்திலர் அம்பூந்துழாயினின்தேன்
புயலுடைநீர்மையினால் * தடவிற்றுஎன் புலன்கலனே.