The Heroine, Captivated by the Beauty of the Hero's Eyes, Speaks in Wonder.
தலைவனது கண்ணழகில் ஈடுபட்ட தலைவி வியந்துரைத்தல்
2519 வன்காற்றறைய ஒருங்கேமறிந்துகிடந்தலர்ந்த *
மென்காற்கமலத்தடம்போற்பொலிந்தன * மண்ணும் விண்ணும்
என்காற்களவின்மைகாண்மினென்பானொத்துவான் நிமிர்ந்த
தன்கால்பணிந்தவென்பால் * எம்பிரானதடங்கண்களே.