The Heroine, Unable to Bear Separation, Speaks with a Broken Heart.
பிரிவாற்றாத தலைவி நெஞ்சழிந்து கூறுதல்
2480 குழல்கோவலர் மடப்பாவையும் மண்மகளும் * திருவும்
நிழற்போல்வனர்கண்டு நிற்குங்கொல்? மீளுங்கொல்? * தண்ணந்துழாய்
அழல்போலடும்சக்கரத்தண்ணல் விண்ணோர்தொழக் கடவும்
தழற்போல்சினத்த * அப்புள்ளின்பின்போனதனி நெஞ்சமே.