The Heroine, Having Received the Garland, Rejoices in the Same North Wind that Previously Afflicted Her.
தார் பெற்ற தலைவி முன்பு வருத்திய வாடை மகிழ்தல்
2504 சேமம்செங்கோனருளே * செறுவாரும்நட்பாகுவரென்று
ஏமம்பெறவையஞ்சொல்லும்மெய்யே * பண்டெல்லாம் அறைகூய்
யாமங்கள்தோறெரிவீசும்நங்கண்ணனந்தண்ணந் துழாய்த்
தாமம்புனைய * அவ்வாடைஈதோவந்துதண்ணென்றதே.