திருவாய்மொழி தனியன்கள் / Thiruvāymozhi taṉiyaṉkal̤

திருவழுதி நாடென்றும் தென்குருகூரென்றும் *

மருவினிய வண் பொருநலென்றும் * அருமறைகள்

அந்தாதி செய்தானடியிணையே எப்பொழுதும் *

சிந்தியாய் நெஞ்சே! தெளிந்து

tiruvazudi nāḍenṟum ten kurugūr enṟum⋆

maruviniya vaṇ porunal enṟum ⋆ arumaṟaigaḻ

andādi śeydān aḍi iṇaiyē eppozudum ⋆

śindiyāy neñjē ! teḻindu

ஈச்வரமுனிகள் / īcvaramuṉikal̤
ThiruvazhudhiNaadu

Word by word meaning

நெஞ்சே! மனமே!; திருவழுதி நாடென்றும் திருவழுதி நாடு என்றும்; தென் குருகூர் என்றும் தென் குருகூர் என்றும்; மருவினிய விரும்பியபடி அழகிய இனிய; வண்பொரு தாமிரபரணி என்ற; நல் என்றும் நல்ல ஆற்றை உடையது என்றும்; அருமறைகள் அருமையான வேதங்களை; அந்தாதி அந்தாதி இலக்கண்ப்படி; செய்தான் அருளிச்செய்த ஆழ்வாரின்; அடியிணையே திருவடிகளையே; எப்பொழுதும் எப்பொழுதும்; சிந்தியாய் தெளிந்து தெளிந்து சிந்தித்து வணங்குவாயாக