She Speaks Only the Words of the Wondrous Lord.
மாயன் பேச்சையே இவள் பேசுகிறாள்
3651 கருமாணிக்கமலைமேல் மணித்தடந்தாமரைக் காடுகள்போல் *
திருமார்வுவாய்கண்கை உந்திகாலுடையாடைகள்செய்ய பிரான் *
திருமாலெம்மான்செழுநீர்வயல் குட்டநாட்டுத் திருப்புலியூர் *
அருமாயன்பேரன்றிப்பேச்சிலள் அன்னைமீர்! இதற்கென்செய்கேனா? (2)