I Attained Fulfillment by Speaking of Kaṇṇaṉ's Divine Plays.
கண்ணனின் லீலைகளைப் பேசி நிறைவு பெற்றேன்
3376 குரவையாய்ச்சியரோடுகோத்ததும் குன்றமொன்றேந்தியதும் *
உரவுநீர்ப்பொய்கைநாகம்காய்ந்ததும் உட்படமற்றும்பல *
அரவில்பள்ளிப்பிரான்தன் மாயவினைகளையேயலற்றி *
இரவும்நன்பகலும் தவிர்கிலம் என்னகுறைவெனக்கே? (2)