The Red Lotus-eyed One is the Trimūrti.
செந்தாமரைக் கண்ணனே மும்மூர்த்தி
3068 செய்யதாமரைக்கண்ணனாய் உலகேழுமுண்ட அவன் கண்டீர் *
வையம்வானம்மனிசர்தெய்வம் மற்றும்மற்றும்மற்றும் முற்றுமாய் *
செய்யசூழ்சுடர்ஞானமாய் வெளிப்பட்டிவைபடைத்தான் * பின்னும்
மொய்கொள்சோதியோடாயினான் ஒருமூவராகிய மூர்த்தியே. (2)