ஸ்ரீ ஆண்டாள் தனியன்கள் / śrī Āṇḍāl taṉiyaṉkal̤

அன்னவயற் புதுவை * ஆண்டாள் அரங்கற்குப்

பன்னு திருப்பாவைப் பல்பதியம் * - இன்னிசையால்

பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை

சூடிக்கொடுத்தாளைச் சொல்லு

annavayal puduvai āṇḍāḻ araṅgaṟku⋆

pannu tiruppāvai ppalpadiyam ⋆ - inniśaiyāl

pāḍi kkoḍuttāḻ naṟ pāmālai⋆ pūmālai

śūḍi kkoḍuttāḻai ccollu

உய்யக்கொண்டார் / uyyakkŏṇṭār

Word by word meaning

அன்னம் ஹம்ஸங்கள் ஸஞ்சரிக்கின்ற; வயல் வயலை உடைய; புதுவை ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த; ஆண்டாள் அரங்கர்க்கு பெரிய பெருமாள் விஷயமாக; பன்னு ஆராய்ந்து அருளிச்செய்த; திருப்பாவை திருப்பாவையாகிற; பல் பதியம் பல பாட்டுக்களை; இன் இசையால் செவிக்கினிய இசையால்; பாடிக் கொடுத்தாள் பாடிக் கொடுத்தவளாய்; நற்பாமாலை நல்ல பாசுரங்களாலான பாமாலையையும்; பூமாலை பூக்களால் தொடுத்த பூமாலையையும்; சூடி தான் சூடி அழகு பார்த்த பின்; கொடுத்தாளை ஸமர்ப்பித்தவளை; சொல்லு அநுஸந்திப்பாய்