Chapter 3

Āndāl praising the Lord and asking for eternal service (அன்று இவ் உலகம்)

இறுதி இலக்கு: கைங்கர்ய சேவை
Āndāl praising the Lord and asking for eternal service (அன்று இவ் உலகம்)

This final, distinct chapter shifts focus entirely from the physical act of waking to the spiritual act of petition. Having achieved the Lord's audience, the Gopis no longer need to beg Him to wake up. Pasurams 24–28 are devoted entirely to Praise (Maṅgalaśāsanam), extolling the Lord's beauty, valor, and deeds. The climax arrives in Pasuram 29 (Ciṟṟam

+ Read more

இந்த இறுதிப் பிரிவு, இறைவனிடம் எதனைக் கேட்க வேண்டும் என்ற நோக்கத்தை மட்டுமே வலியுறுத்துகிறது. இறைவனின் திருமுன் வந்துவிட்டதால், இனி அவரை எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை. பாசுரங்கள் 24–28 வரை அவருடைய அழகு, வீரம், நற்குணங்கள் ஆகியவற்றைப் பாடி மங்களாசாசனம் செய்கிறார்கள். இந்தப் பதிகத்தின்

+ Read more
Verses: 24 to 30
Grammar: Eṭṭadi Nārsīrovi Karppaka Kocchakakkalippā / எட்டடி நார்சீரொவி கற்பக கொச்சகக் கலிப்பா
Recital benefits: Will receive the grace of the Lord and live happy
  • TP 3.24
    497 ## அன்று இவ் உலகம் அளந்தாய் ! * அடி போற்றி *
    சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி *
    பொன்றச் சகடம் உதைத்தாய் ! புகழ் போற்றி *
    கன்று குணிலா எறிந்தாய் ! கழல் போற்றி **
    குன்று குடையா எடுத்தாய் ! * குணம் போற்றி *
    வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி *
    என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் *
    இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய் (24)
  • TP 3.25
    498 ஒருத்தி மகனாய்ப் பிறந்து * ஓர் இரவில்
    ஒருத்தி மகனாய் ஒளித்து வளர *
    தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த *
    கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் **
    நெருப்பு என்ன நின்ற நெடுமாலே ! * உன்னை
    அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில் *
    திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி *
    வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் (25)
  • TP 3.26
    499 மாலே மணிவண்ணா ! * மார்கழி நீர் ஆடுவான் *
    மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் *
    ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன *
    பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே **
    போல்வன சங்கங்கள் * போய்ப்பாடு உடையனவே *
    சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே *
    கோல விளக்கே கொடியே விதானமே *
    ஆலின் இலையாய் ! அருள் ஏலோர் எம்பாவாய் (26)
  • TP 3.27
    500 ## கூடாரை வெல்லும் சீர்க் * கோவிந்தா ! உன்தன்னைப்
    பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம் *
    நாடு புகழும் பரிசினால் நன்றாக *
    சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே **
    பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம் *
    ஆடை உடுப்போம் அதன் பின்னே பால் சோறு *
    மூட நெய் பெய்து முழங்கை வழிவார *
    கூடியிருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய் (27)
  • TP 3.28
    501 ## கறவைகள் பின் சென்று * கானம் சேர்ந்து உண்போம் *
    அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து * உன் தன்னைப்
    பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் *
    குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா ! ** உன் தன்னோடு
    உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது *
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் * உன் தன்னை
    சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே *
    இறைவா! நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய் (28)
  • TP 3.29
    502 ## சிற்றம் சிறுகாலே * வந்து உன்னைச் சேவித்து * உன்
    பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் *
    பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து * நீ
    குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது **
    இற்றைப் பறைகொள்வான் * அன்று காண் கோவிந்தா ! *
    எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் * உன் தன்னோடு
    உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் *
    மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய் (29)
  • TP 3.30
    503 ## வங்கக் கடல் கடைந்த * மாதவனைக் கேசவனைத் *
    திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி *
    அங்கு அப்பறை கொண்ட ஆற்றை * அணி புதுவைப்
    பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன **
    சங்கத் தமிழ் மாலை * முப்பதும் தப்பாமே *
    இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள் *
    செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் *
    எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் (30)