Chapter 8

Thirumālirunjolai 1 - (முந்துற உரைக்கேன்)

திருமாலிருஞ்சோலை 1
Thirumālirunjolai 1 - (முந்துற உரைக்கேன்)
The Lord resides with great affection on two hills in Tamil Nadu. One is Vadavenkatam (Tirupati), and the other is Thirumaliruncholai. The āzhvār calls upon his mind, saying, "O foolish heart! Let's give up the stumbling caused by getting entangled in the snare of women's eyes and worship Thirumaliruncholai." Thus, he invites his mind to experience Thirumaliruncholai, where the presiding deity is Azhagar.
எம்பெருமான் தமிழ் நாட்டில் இரண்டு மலைகளில் மிகவும் ஆசையுடன் வாழ்கிறான். ஒன்று வடவேங்கடம்: மற்றொன்று திருமாலிருஞ்சோலை மலை. மட நெஞ்சே! மாதரார் கண் வலையில் சிக்கித் தடுமாறு வதை விட்டொழித்துத் திருமாலிருஞ்சோலையை வணங்குவோம் வா என்று ஆழ்வார் அழைத்துத் திருமாலிருஞ்சோலையை அனுபவிக்கிறார் ஈண்டு எழுந்தருளியுள்ள பெருமான் அழகர்.
Verses: 1818 to 1827
Grammar: Eḻuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will rule this world surrounded by the wide oceans under a royal umbrella and become gods in the sky
  • PT 9.8.1
    1818 முந்துற உரைக்கேன் விரைக் குழல் மடவார் *
    கலவியை விடு தடுமாறல் *
    அந்தரம் ஏழும் அலை கடல் ஏழும்
    ஆய * எம் அடிகள் தம் கோயில் **
    சந்தொடு மணியும் அணி மயில் தழையும் *
    தழுவி வந்து அருவிகள் நிரந்து *
    வந்து இழி சாரல் மாலிருஞ்சோலை *
    வணங்குதும் வா மட நெஞ்சே 1
  • PT 9.8.2
    1819 ## இண்டையும் புனலும் கொண்டு இடை இன்றி *
    எழுமினோ தொழுதும் என்று * இமையோர்
    அண்டரும் பரவ அரவணைத் துயின்ற *
    சுடர் முடிக் கடவுள் தம் கோயில் **
    விண்டு அலர் தூளி வேய் வளர் புறவில் *
    விரை மலர்க் குறிஞ்சியின் நறுந் தேன் *
    வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை *
    வணங்குதும் வா மட நெஞ்சே 2
  • PT 9.8.3
    1820 பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்தப் *
    பெரு நிலம் அருளின் முன் அருளி *
    அணி வளர் குறள் ஆய் அகல் இடம் முழுதும் *
    அளந்த எம் அடிகள் தம் கோயில் **
    கணி வளர் வேங்கை நெடு நிலம் அதனில் *
    குறவர் தம் கவணிடைத் துரந்த *
    மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை *
    வணங்குதும் வா மட நெஞ்சே 3
  • PT 9.8.4
    1821 சூர்மையில் ஆய பேய் முலை சுவைத்துச் *
    சுடு சரம் அடு சிலைத் துரந்து *
    நீர்மை இலாத தாடகை மாள *
    நினைந்தவர் மனம் கொண்ட கோயில் **
    கார் மலி வேங்கை கோங்கு அலர் புறவில் *
    கடி மலர்க் குறிஞ்சியின் நறுந் தேன் *
    வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை *
    வணங்குதும் வா மட நெஞ்சே 4
  • PT 9.8.5
    1822 வணங்கல் இல் அரக்கன் செருக்களத்து அவிய *
    மணி முடி ஒருபதும் புரள *
    அணங்கு எழுந்து அவன் தன் கவந்தம் நின்று ஆட *
    அமர்செய்த அடிகள் தம் கோயில் **
    பிணங்கலின் நெடு வேய் நுதி முகம் கிழிப்பப் *
    பிரசம் வந்து இழிதர பெருந் தேன் *
    மணங் கமழ் சாரல் மாலிருஞ்சோலை *
    வணங்குதும் வா மட நெஞ்சே 5
  • PT 9.8.6
    1823 விடம் கலந்து அமர்ந்த அரவணைத் துயின்று *
    விளங்கனிக்கு இளங் கன்று விசிறி *
    குடம் கலந்து ஆடி குரவை முன் கோத்த *
    கூத்த எம் அடிகள் தம் கோயில் **
    தடங் கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத் *
    தடவரைக் களிறு என்று முனிந்து *
    மடங்கல் நின்று அதிரும் மாலிருஞ்சோலை *
    வணங்குதும் வா மட நெஞ்சே 6
  • PT 9.8.7
    1824 தேனுகன் ஆவி போய் உக * அங்கு ஓர்
    செழுந் திரள் பனங்கனி உதிர *
    தான் உகந்து எறிந்த தடங் கடல் வண்ணர் *
    எண்ணி முன் இடம் கொண்ட கோயில் **
    வானகச் சோலை மரதகச் சாயல் *
    மா மணிக் கல் அதர் நுழைந்து *
    மான் நுகர் சாரல் மாலிருஞ்சோலை *
    வணங்குதும் வா மட நெஞ்சே 7
  • PT 9.8.8
    1825 புதம் மிகு விசும்பில் புணரி சென்று அணவப் *
    பொரு கடல் அரவணைத் துயின்று *
    பதம் மிகு பரியின் மிகு சினம் தவிர்த்த *
    பனி முகில் வண்ணர் தம் கோயில் **
    கதம் மிகு சினத்த கட தடக் களிற்றின் *
    கவுள் வழிக் களி வண்டு பருக *
    மதம் மிகு சாரல் மாலிருஞ்சோலை *
    வணங்குதும் வா மட நெஞ்சே 8
  • PT 9.8.9
    1826 புந்தி இல் சமணர் புத்தர் என்று இவர்கள் *
    ஒத்தன பேசவும் உகந்திட்டு *
    எந்தை பெம்மானார் இமையவர் தலைவர் *
    எண்ணி முன் இடம் கொண்ட கோயில் ***
    சந்தனப் பொழிலின் தாழ் சினை நீழல்
    தாழ்வரை மகளிர்கள் நாளும் *
    மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ்சோலை *
    வணங்குதும் வா மட நெஞ்சே 9
  • PT 9.8.10
    1827 ## வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை *
    மா மணி வண்ணரை வணங்கும் *
    தொண்டரைப் பரவும் சுடர் ஒளி நெடு வேல் *
    சூழ் வயல் ஆலி நல் நாடன் **
    கண்டல் நல் வேலி மங்கையர் தலைவன் *
    கலியன் வாய் ஒலிசெய்த பனுவல் *
    கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள் *
    ஆள்வர் இக் குரை கடல் உலகே 10