They Shall Become Devas and Rejoice
தேவர்களாகி மகிழ்வர்
1767 அன்னமும்கேழலும்மீனுமாய
ஆதியைநாகையழகியாரை *
கன்னிநன்மாமதிள்மங்கைவேந்தன்
காமருசீர்க்கலிகன்றி * குன்றா
இன்னிசையால்சொன்னசெஞ்சொல்மாலை
ஏழுமிரண்டுமொரொன்றும்வல்லார் *
மன்னவராய்உலகாண்டு மீண்டும்
வானவராய்மகிழ்வெய்துவரே. (2)