Chapter 6

Thirukkannapuram 6 - (தொண்டீர் உய்யும்)

திருக்கண்ணபுரம் 6
Thirukkannapuram 6 - (தொண்டீர் உய்யும்)
The āzhvār declares, "To attain salvation, let us worship Sowriraja Perumal of Thirukannapuram."
நாம் உய்யத் திருக்கண்ணபுரத்து சவுரிராஜப் பெருமாளைத் தொழுவோம் என்கிறார் ஆழ்வார்.
Verses: 1698 to 1707
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will rule this world surrounded by the wide oceans under a royal umbrella and become gods in the sky
  • PT 8.6.1
    1698 ## தொண்டீர் உய்யும் வகை கண்டேன் * துளங்கா அரக்கர் துளங்க * முன்
    திண் தோள் நிமிரச் சிலை வளையச் * சிறிதே முனிந்த திருமார்வன் **
    வண்டு ஆர் கூந்தல் மலர் மங்கை * வடிக் கண் மடந்தை மா நோக்கம்
    கண்டான் * கண்டுகொண்டு உகந்த * கண்ணபுரம் நாம் தொழுதுமே. 1
  • PT 8.6.2
    1699 பொருந்தா அரக்கர் வெம் சமத்துப் * பொன்ற அன்று புள் ஊர்ந்து *
    பெருந் தோள் மாலி தலை புரளப் * பேர்ந்த அரக்கர் தென் இலங்கை **
    இருந்தார் தம்மை உடன்கொண்டு * அங்கு எழில் ஆர் பிலத்துப் புக்கு ஒளிப்ப *
    கருந் தாள் சிலை கைக்கொண்டான் ஊர் * கண்ணபுரம் நாம் தொழுதுமே 2
  • PT 8.6.3
    1700 வல்லி இடையாள் பொருட்டாக * மதிள் நீர் இலங்கையார் கோவை *
    அல்லல் செய்து வெம் சமத்துள் * ஆற்றல் மிகுத்த ஆற்றலான் **
    வல் ஆள் அரக்கர் குலப்பாவை வாட * முனி தன் வேள்வியை *
    கல்விச் சிலையால் காத்தான் ஊர் * கண்ணபுரம் நாம் தொழுதுமே 3
  • PT 8.6.4
    1701 மல்லை முந்நீர் அதர்பட * வரி வெம் சிலை கால் வளைவித்து *
    கொல்லை விலங்கு பணிசெய்ய * கொடியோன் இலங்கை புகல் உற்று **
    தொல்லை மரங்கள் புகப் பெய்து * துவலை நிமிர்ந்து வான் அணவ *
    கல்லால் கடலை அடைத்தான் ஊர் * கண்ணபுரம் நாம் தொழுதுமே 4
  • PT 8.6.5
    1702 ஆமை ஆகி அரி ஆகி * அன்னம் ஆகி * அந்தணர் தம்

    ஓமம் ஆகி ஊழி ஆகி * உவரி சூழ்ந்த நெடும் புணரி **

    சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் * சிரமும் கரமும் துணித்து * முன்

    காமன் பயந்தான் கருதும் ஊர் * கண்ணபுரம் நாம் தொழுதுமே 5
  • PT 8.6.6
    1703 வருந்தாது இரு நீ மட நெஞ்சே * நம் மேல் வினைகள் வாரா * முன்
    திருந்தா அரக்கர் தென் இலங்கை * செந் தீ உண்ண சிவந்து ஒருநாள் **
    பெருந் தோள் வாணற்கு அருள் புரிந்து * பின்னை மணாளன் ஆகி * முன்
    கருந் தாள் களிறு ஒன்று ஒசித்தான் ஊர் * கண்ணபுரம் நாம் தொழுதுமே 6
  • PT 8.6.7
    1704 இலை ஆர் மலர்ப் பூம் பொய்கைவாய் * முதலை தன்னால் அடர்ப்புண்டு *
    கொலை ஆர் வேழம் நடுக்கு உற்றுக் குலைய * அதனுக்கு அருள்புரிந்தான் **
    அலை நீர் இலங்கைத் தசக்கிரீவற்கு * இளையோற்கு அரசை அருளி * முன்
    கலை மாச் சிலையால் எய்தான் ஊர் * கண்ணபுரம் நாம் தொழுதுமே 7
  • PT 8.6.8
    1705 மால் ஆய் மனமே அருந் துயரில் * வருந்தாது இரு நீ வலி மிக்க *
    கால் ஆர் மருதும் காய் சினத்த கழுதும் * கத மாக் கழுதையும் **
    மால் ஆர் விடையும் மத கரியும் * மல்லர் உயிரும் மடிவித்து *
    காலால் சகடம் பாய்ந்தான் ஊர் * கண்ணபுரம் நாம் தொழுதுமே 8
  • PT 8.6.9
    1706 குன்றால் மாரி பழுது ஆக்கி * கொடி ஏர் இடையாள் பொருட்டாக *
    வன் தாள் விடை ஏழ் அன்று அடர்த்த * வானோர் பெருமான் மா மாயன் **
    சென்றான் தூது பஞ்சவர்க்கு ஆய்த் * திரி கால் சகடம் சினம் அழித்து *
    கன்றால் விளங்காய் எறிந்தான் ஊர் * கண்ணபுரம் நாம் தொழுதுமே 9
  • PT 8.6.10
    1707 ## கரு மா முகில் தோய் நெடு மாடக் * கண்ணபுரத்து எம் அடிகளை *
    திரு மா மகளால் அருள்மாரி * செழுநீர் ஆலி வள நாடன் **
    மருவு ஆர் புயல் கைக் கலிகன்றி * மங்கை வேந்தன் ஒலி வல்லார் *
    இரு மா நிலத்துக்கு அரசு ஆகி * இமையோர் இறைஞ்ச வாழ்வாரே 10