The Servants of Sāranātha Shall Become Devas
சாரநாதன் அடியார்களே தேவர்களாவர்
1580 மீதோடிவாளெயிறுமின்னிலக
முன்விலகும்உருவினாளை *
காதோடுகொடிமூக்கன்றுடனறுத்த
கைத்தலத்தா! என்றுநின்று *
தாதோடுவண்டலம்பும்
தண்சேறையெம்பெருமான்தாளையேத்தி *
போதோடுபுனல்தூவும்புண்ணியரே
விண்ணவரில்பொலிகின்றாரே.