Bhaktavatsala is He Who Helps Me in Times of Need
எனக்கு உற்றுழி உதவுபவன் பக்தவத்சலன்
1641 பேய்முலைத்தலைநஞ்சுண்டபிள்ளையைத்
தெள்ளியார்வணங்கப்படுந்தேவனை *
மாயனைமதிட்கோவலிடைகழிமைந்தனை
அன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை * இலங்கும்சுடர்ச்சோதியை
எந்தையைஎனக்குஎய்ப்பினில்வைப்பினை *
காசினைமணியைச்சென்றுநாடிக்
கண்ணமங்கையுள்கண்டுகொண்டேனே.