Chapter 5

Thirunaraiyur 2 - (கலங்க முந்நீர்)

திருநறையூர் 2
Thirunaraiyur 2 - (கலங்க முந்நீர்)
The āzhvār sings again in praise of the Lord residing in the temple at Thirunirnayur.
திருநிறையூரில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள நம்பியையே ஆழ்வார் ஈண்டும் பாடுகிறார்.
Verses: 1488 to 1497
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Recital benefits: The Lord will save them and be with them
  • PT 6.5.1
    1488 ## கலங்க முந்நீர் கடைந்து * அமுதம் கொண்டு * இமையோர்
    துலங்கல் தீர * நல்கு சோதிச் சுடர் ஆய **
    வலங்கை ஆழி இடங்கைச் சங்கம் * உடையான் ஊர் *
    நலம் கொள் வாய்மை * அந்தணர் வாழும் நறையூரே 1
  • PT 6.5.2
    1489 முனை ஆர் சீயம் ஆகி * அவுணன் முரண் மார்வம் *
    புனை வாள் உகிரால் * போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர் **
    சினை ஆர் தேமாஞ் செந் தளிர் கோதிக் * குயில் கூவும்
    நனை ஆர் சோலை சூழ்ந்து * அழகு ஆய நறையூரே 2
  • PT 6.5.3
    1490 ஆனை புரவி தேரொடு காலாள் * அணிகொண்ட *
    சேனைத் தொகையைச் சாடி * இலங்கை செற்றான் ஊர் **
    மீனைத் தழுவி வீழ்ந்து எழும் * மள்ளர்க்கு அலமந்து *
    நானப் புதலில் * ஆமை ஒளிக்கும் நறையூரே 3
  • PT 6.5.4
    1491 உறி ஆர் வெண்ணெய் உண்டு * உரலோடும் கட்டுண்டு *
    வெறி ஆர் கூந்தல் * பின்னை பொருட்டு ஆன் வென்றான் ஊர் **
    பொறி ஆர் மஞ்ஞை * பூம் பொழில்தோறும் நடம் ஆட *
    நறு நாள்மலர்மேல் * வண்டு இசை பாடும் நறையூரே 4
  • PT 6.5.5
    1492 விடை ஏழ் வென்று * மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பன் ஆய் *
    நடையால் நின்ற * மருதம் சாய்த்த நாதன் ஊர் **
    பெடையோடு அன்னம் * பெய்வளையார் தம் பின் சென்று *
    நடையோடு இயலி * நாணி ஒளிக்கும் நறையூரே 5
  • PT 6.5.6
    1493 பகு வாய் வன் பேய் * கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு *
    புகு வாய் நின்ற * போதகம் வீழப் பொருதான் ஊர் **
    நெகு வாய் நெய்தல் * பூ மது மாந்திக் கமலத்தின் *
    நகு வாய் மலர்மேல் * அன்னம் உறங்கும் நறையூரே 6
  • PT 6.5.7
    1494 முந்து நூலும் முப்புரி நூலும் * முன் ஈந்த *
    அந்தணாளன் பிள்ளையை * அஞ்ஞான்று அளித்தான் ஊர் **
    பொந்தில் வாழும் பிள்ளைக்கு * ஆகிப் புள் ஓடி *
    நந்து வாரும் * பைம் புனல் வாவி நறையூரே 7
  • PT 6.5.8
    1495 வெள்ளைப் புரவித் தேர் விசயற்கு ஆய் * விறல் வியூகம்
    விள்ள * சிந்துக்கோன் விழ * ஊர்ந்த விமலன் ஊர் **
    கொள்ளைக் கொழு மீன் * உண் குருகு ஓடி பெடையோடும் *
    நள்ளக் கமலத் * தேறல் உகுக்கும் நறையூரே 8
  • PT 6.5.9
    1496 பாரை ஊரும் பாரம் தீரப் * பார்த்தன் தன்
    தேரை ஊரும் * தேவதேவன் சேரும் ஊர் **
    தாரை ஊரும் * தண் தளிர் வேலி புடை சூழ *
    நாரை ஊரும் * நல் வயல் சூழ்ந்த * நறையூரே 9
  • PT 6.5.10
    1497 ## தாமத் துளப * நீள் முடி மாயன் தான் நின்ற *
    நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த * நறையூர்மேல் **
    காமக் கதிர் வேல் வல்லான் * கலியன் ஒலி மாலை *
    சேமத் துணை ஆம் * செப்பும் அவர்க்கு திருமாலே 10