Chapter 6

Thennarangam 3 - (கைம் மான)

திருவரங்கம் 3
Thennarangam 3 - (கைம் மான)
The āzhvār elaborates on all the glories of Thiruvarangan (Lord Ranganatha).
திருவரங்கனின் பெருமைகளையெல்லாம் ஈண்டு விளக்குகிறார் ஆழ்வார்.
Verses: 1398 to 1407
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Recital benefits: Will not get affected by the results of bad karma
  • PT 5.6.1
    1398 ## கைம் மான மழ களிற்றைக் * கடல் கிடந்த கருமணியை *
    மைம் மான மரதகத்தை * மறை உரைத்த திருமாலை **
    எம்மானை எனக்கு என்றும் இனியானைப் * பனி காத்த
    அம்மானை * யான் கண்டது * அணி நீர்த் தென் அரங்கத்தே 1
  • PT 5.6.2
    1399 ## பேரானைக் * குறுங்குடி எம் பெருமானை * திருத்தண்கால்
    ஊரானைக் * கரம்பனூர் உத்தமனை ** முத்து இலங்கு
    கார் ஆர் திண் கடல் ஏழும் * மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டும் *
    ஆராது என்று இருந்தானைக் * கண்டது தென் அரங்கத்தே 2
  • PT 5.6.3
    1400 ஏன் ஆகி உலகு இடந்து * அன்று இரு நிலனும் பெரு விசும்பும் *
    தான் ஆய பெருமானை * தன் அடியார் மனத்து என்றும் **
    தேன் ஆகி அமுது ஆகித் * திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால் *
    ஆன் ஆயன் ஆனானைக் * கண்டது தென் அரங்கத்தே 3
  • PT 5.6.4
    1401 வளர்ந்தவனைத் தடங் கடலுள் * வலி உருவில் திரி சகடம் *
    தளர்ந்து உதிர உதைத்தவனைத் * தரியாது அன்று இரணியனைப்
    பிளந்தவனை ** பெரு நிலம் ஈர் அடி நீட்டிப் * பண்டு ஒருநாள்
    அளந்தவனை * யான் கண்டது * அணி நீர்த் தென் அரங்கத்தே 4
  • PT 5.6.5
    1402 நீர் அழல் ஆய் * நெடு நிலன் ஆய் நின்றானை * அன்று அரக்கன்
    ஊர் அழலால் உண்டானைக் * கண்டார் பின் காணாமே **
    பேர் அழல் ஆய்ப் பெரு விசும்பு ஆய்ப் * பின் மறையோர் மந்திரத்தின் *
    ஆர் அழலால் உண்டானைக் * கண்டது தென் அரங்கத்தே 5
  • PT 5.6.6
    1403 தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார் * தவ நெறியை தரியாது *
    கஞ்சனைக் கொன்று * அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை **
    வெம் சினத்த கொடுந் தொழிலோன் * விசை உருவை அசைவித்த *
    அம் சிறைப் புள் பாகனை * யான் கண்டது தென் அரங்கத்தே 6
  • PT 5.6.7
    1404 ## சிந்தனையைத் தவநெறியைத் * திருமாலை * பிரியாது
    வந்து எனது மனத்து இருந்த * வடமலையை ** வரி வண்டு ஆர்
    கொந்து அணைந்த பொழில் கோவல் * உலகு அளப்பான் அடி நிமிர்த்த
    அந்தணனை * யான் கண்டது * அணி நீர்த் தென் அரங்கத்தே 7
  • PT 5.6.8
    1405 துவரித்த உடையவர்க்கும் * தூய்மை இல்லாச் சமணர்க்கும் *
    அவர்கட்கு அங்கு அருள் இல்லா * அருளானை ** தன் அடைந்த
    எமர்கட்கும் அடியேற்கும் * எம்மாற்கும் எம் அனைக்கும் *
    அமரர்க்கும் பிரானாரைக் * கண்டது தென் அரங்கத்தே 8
  • PT 5.6.9
    1406 பொய் வண்ணம் மனத்து அகற்றிப் * புலன் ஐந்தும் செல வைத்து *
    மெய் வண்ணம் நினைந்தவர்க்கு * மெய்ந் நின்ற வித்தகனை **
    மை வண்ணம் கரு முகில்போல் * திகழ் வண்ணம் மரதகத்தின் *
    அவ் வண்ண வண்ணனை * யான் கண்டது தென் அரங்கத்தே 9
  • PT 5.6.10
    1407 ## ஆ மருவி நிரை மேய்த்த * அணி அரங்கத்து அம்மானை *
    காமரு சீர்க் கலிகன்றி * ஒலிசெய்த மலி புகழ் சேர் **
    நா மருவு தமிழ் மாலை * நால் இரண்டோடு இரண்டினையும் *
    தாம் மருவி வல்லார்மேல் * சாரா தீவினை தானே 10