Tirukkāvaḷampāḍi: Regarding Lord Gopālakṛṣṇa
திருக்காவம்பாடி:கோபாலஸ்வாமி விஷயம்
1298 தாவளந்துஉலகமுற்றும் தடமலர்ப்பொய்கைபுக்கு *
நாவளம்நவின்றிங்கேத்த நாகத்தின்நடுக்கந்தீர்த்தாய் *
மாவளம்பெருகி மன்னும்மறையவர்வாழும்நாங்கை *
காவளம்பாடிமேய கண்ணனே! களைகண்நீயே. (2)