Paramēccura Viṇṇakaram, Worshipped by the Pallava King
பல்லவன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம்
1128 சொல்லுவன்சொற்பொருள்தானவை யாய்ச்
சுவைஊறுஒலிநாற்றமும்தோற்றமுமாய் *
நல்லரன் நான்முகன்நாரணனுக்குஇடந்தான்
தடம்சூழ்ந்துஅழகாயகச்சி *
பல்லவன்வில்லவனென்றுலகில்
பலராய்ப்பலவேந்தர் வணங்குகழல்
பல்லவன் * மல்லையர்கோன்பணிந்த
பரமேச்சுரவிண்ணகரமதுவே. (2)