He Who Stood upon the Board of Arjuna's Chariot
அருச்சுனன் தேர்த்தட்டில் நின்றவன்
1068 விற்பெருவிழவும் கஞ்சனும்மல்லும்
வேழமும்பாகனும்வீழ *
செற்றவன்தன்னை * புரமெரிசெய்த
சிவனுறுதுயர்களைதேவை *
பற்றலர்வீயக்கோல் கையில்கொண்டு
பார்த்தன்றன்தேர்முன்நின்றானை *
சிற்றவைபணியால்முடிதுறந் தானைத்
திருவல்லிக்கேணிக்கண்டேனே. (2)