PT 10.2.1

இராமபிரானே! அடைக்கலம் அருள்

1858 இரக்கமின்றிஎங்கோன்செய்ததீமை
இம்மையேஎமக்கெய்திற்றுக்காணீர் *
பரக்கயாமின்றுரைத்துஎன்? இராவணன்
பட்டனன் இனியவர்க்கு உரைக்கோம் *
குரக்குநாயகர்காள்! இளங்கோவே!
கோலவல்விலிராமபிரானே! *
அரக்கராடழைப்பாரில்லைநாங்கள்
அஞ்சினோந்தடம்பொங்கத்தம்பொங்கோ. (2)
1858 ## இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை *
இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர் *
பரக்க யாம் இன்று உரைத்து என்? இராவணன் *
பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம்? **
குரக்கு நாயகர்காள் இளங்கோவே *
கோல வல் வில் இராமபிரானே *
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை * நாங்கள்
அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 1
1858 ## irakkam iṉṟi ĕm koṉ cĕyta tīmai *
immaiye ĕmakku ĕytiṟṟuk kāṇīr *
parakka yām iṉṟu uraittu ĕṉ? irāvaṇaṉ *
paṭṭaṉaṉ iṉi yāvarkku uraikkom? **
kurakku-nāyakarkāl̤ il̤aṅkove *
kola val vil irāmapirāṉe *
arakkar āṭu azhaippār illai * nāṅkal̤
añciṉom-taṭam pŏṅkattam pŏṅko-1

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1858. “Our king was not compassionate and did evil things. Now the result of those evil deeds gives us pain, but what is the use of our saying this now. Rāvanan, our king, was killed. What can we tell about him to others? O chiefs of the monkeys, O young prince! O lord Rāma, with your strong beautiful bow, we are Rākshasas but you have conquered us. Our Rākshasas worry about joining the group of dancers and dancing. We are afraid of you. Thadam pongaththam pongo!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
எம்கோன் எங்கள் அரசன் இராவணன்; இரக்கம் இன்றி இரக்கம் இல்லாமல்; செய்த தீமை செய்த தீமை; இம்மையே இப்பிறப்பிலேயே; எய்திற்றுக் பலித்துவிட்டது; காணீர் பாருங்கோள்; பரக்க யாம் இன்று இப்போது நாங்கள் விரிவாக; உரைத்து என்? சொல்லி என்ன பயன்?; இராவணன் பட்டனன் ராவணன் வீழ்ந்தான்; இனி யாவர்க்கு இனிமேல் யாரிடம்; உரைக்கோம் கூறுவோம்; குரக்கு நாயகர்காள்! வாநரஸேநாபதிகளே!; இளங்கோவே! இளைய பெருமாளே!; கோல வல் வில் வலிமையான வில்லையுடைய; இராமபிரானே! இராமபிரானே!; அரக்கர் அரக்கர்களில்; ஆடு வெற்றியைப் பெற்றுத்தருகிறோம் என்று; அழைப்பார் கூறி அழைப்பார்; இல்லை நாங்கள் யாருமில்லை நாங்கள்; அஞ்சினோம் பயப்படுகிறோம்; தடம் தோற்ற நாங்கள்; பொங்கத்தம் பொங்கோ பொங்கத்தம் பொங்கோ என்று ஆடுகிற முழக்கத்தைக் கேட்டு சரண் அடைகிறோம்

Āchārya Vyākyānam

இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை யிம்மையே எமக்கு எய்திற்று காணீர் பரக்க யாம் இன்று உரைத்தென்  இராவணன் பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம் குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல  வல் விலி  ராமபிரானே அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ —10-2-1-

(இராவணன் பட்டனன்–நாங்கள் பட்டதைப் பார்த்தால் அவனும் சீக்கிரம் படுவான் -மாள்வான் ம்ருத்யு பரன் இறந்தது சமம்

+ Read more