I Listened to the Words of a Sinner!
பாவி சொல் கேட்டேனே!
734 பொருந்தார்கைவேல்நுதிபோல்
பரல்பாய மெல்லடிக்கள்குருதிசோர *
விரும்பாதகான்விரும்பிவெயிலுறைப்ப
வெம்பசிநோய்கூர * இன்று
பெரும்பாவியேன்மகனே! போகின்றாய்
கேகயர்கோன்மகளாய்ப்பெற்ற *
அரும்பாவிசொற்கேட்டஅருவினையேன்
என்செய்கேன்? அந்தோ! யானே.