O Cuckoo! Call for the Lord of Vaikuṇṭham to Come.
குயிலே! வைகுந்தன் வரக் கூவாய்
548 என்புருகியினவேல்நெடுங்கண்கள்
இமைபொருந்தாபலநாளும் *
துன்பக்கடல்புக்குவைகுந்தனென்பது ஒர்
தோணிபெறாதுஉழல்கின்றேன் *
அன்புடையாரைப்பிரிவுறுநோயது
நீயுமறிதிகுயிலே! *
பொன்புரைமேனிக்கருளக்கொடியுடைப்
புண்ணியனைவரக்கூவாய்.