They Shall Live Beneath the Feet of Our Lord
எம்பெருமான் அடிக்கீழ் வாழ்வர்
646 பருந்தாட்களிற்றுக்கருள்செய்த பரமன்றன்னை * பாரின்மேல்
விருந்தாவனத்தேகண்டமை விட்டுசித்தன்கோதைசொல் *
மருந்தாமென்றுதம்மனத்தே வைத்துக்கொண்டுவாழ்வார்கள் *
பெருந்தாளுடையபிரானடிக்கீழ் பிரியாதென்றுமிருப்பாரே. (2)