Athigiri, Athiyur, Kānchipuram, Sathyavradhakshetram

2059 நீரகத்தாய் நெடுவரையி னுச்சிமேலாய்!
நிலாத்திங்கள்துண்டகத்தாய்! நிறைந்தகச்சி
ஊரகத்தாய்! * ஒண்துரைநீர்வெஃகாவுள்ளாய்
உள்ளுவாருள்ளத்தாய்! * உலகமேத்தும்
காரகத்தாய்! கார்வானத்துள்ளாய்! கள்வா!
காமருபூங்காவிரியின்தென்பால்மன்னு
பேரகத்தாய்! * பேராதுஎன்நெஞ்சினுள்ளாய்!
பெருமான்உன்திருவடியேபேணினேனே. (2)
2066 கல்லுயர்ந்தநெடுமதிள்சூழ்கச்சிமேய
களிறு! என்றும் கடல்கிடந்தகனியே! என்றும் *
அல்லியம்பூமலர்ப்பொய்கைப்பழனவேலி
அணியழுந்தூர்நின்றுகந்தஅம்மான்! என்றும் *
சொல்லுயர்ந்தநெடுவீணைமுலைமேல்தாங்கித்
தூமுறுவல்நகைஇறையேதோன்றநக்கு *
மெல்விரல்கள்சிவப்பெய்தத்தடவிஆங்கே
மென்கிளிபோல்மிகமிழற்றும்என்பேதையே. (2)