
2059 நீரகத்தாய் நெடுவரையி னுச்சிமேலாய்!
நிலாத்திங்கள்துண்டகத்தாய்! நிறைந்தகச்சி
ஊரகத்தாய்! * ஒண்துரைநீர்வெஃகாவுள்ளாய்
உள்ளுவாருள்ளத்தாய்! * உலகமேத்தும்
காரகத்தாய்! கார்வானத்துள்ளாய்! கள்வா!
காமருபூங்காவிரியின்தென்பால்மன்னு
பேரகத்தாய்! * பேராதுஎன்நெஞ்சினுள்ளாய்!
பெருமான்உன்திருவடியேபேணினேனே. (2)
2064 கல்லெடுத்துக்கல்மாரிகாத்தாய்! என்றும்
காமருபூங்கச்சியூரகத்தாய் என்றும் *
வில்லிறுத்துமெல்லியல்தோள்தோய்ந்தாய்! என்றும்
வெஃகாவில்துயிலமர்ந்தவேந்தே! என்றும் *
மல்லடர்த்துமல்லரைஅன்றுஅட்டாய்! என்றும் *
மாகீண்டகைத்தலத்துஎன்மைந்தா! என்றும் *
சொல்லெடுத்துத்தன்கிளியைச்சொல்லேயென்று
துணைமுலைமேல்துளிசோரச்சோர்கின்றாளே.