All Taniyan

பொது தனியன்கள்(மணவாள மாமுனிகள்) / pŏtu taṉiyaṉkal̤ (maṇavāl̤a māmuṉikal̤)

ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம்

śrīcaileca tayāpātram tīpaktyāti kuṇārṇavam
yatīntra pravaṇam vante ramyajāmātaram munim
அழகிய மணவாளன் / azhakiya maṇavāl̤aṉ

Word by word meaning

श्री शैलेश (ஸ்ரீஶைலேஶ) திருமலைப் பிள்ளையின்; दयापात्रं (த3யாபாத்ரம்) கிருபைக்குப்பாத்திரமானவரும்; धीभक्त्यादि (தீ4ப3க்த்யாதி3) ஞானம் பக்தி ஆகிய; गुणार्णवम् (கு3ணார்ணவம்) குணங்கள் கடல் போல் நிறைந்திருப்பவரும்; यतीन्द्रप्रवणं (யதீந்த்3ரப்ரவணம்) இராமானுசரிடம் ஈடு இணையில்லாத அன்பு உடையவரும்; रम्य जामातरं मुनिम् (ரம்யஜாமாதரம்) அழகிய மணவாள மா முனிவரை; वन्दे (முநிம்) வணங்குகிறேன்

பொது தனியன்கள் (வேதாந்த தேசிகன்) / pŏtu taṉiyaṉkal̤ (vetānta tecikaṉ)

ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞான வைராக்ய பூஷனம்
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம்

rāmānuja tayāpātram jñāṉa vairākya pūṣaṉam
śrīmat veṅkaṭanātāryam vante vetānta tecikam
ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் / prahmatantra svatantra jīyar

Word by word meaning

रामानुज இராமானுசரின்; दयापात्रं கருணைக்குப் பாத்திரமானவரும்; ज्ञानवैराग्य ஞானம் வைராக்யம் ஆகியவைகளை; भूषणम् அணிகலன்களாகக் கொண்டவரும்; श्रीमद् वेंकटनाथार्यं வேங்கடநாதன் என்ற பெருமை படைத்தவருமான; वेदान्त देशिकम् வேதாந்த தேசிகரை; वन्दे வணங்குகிறேன்

பொது தனியன்கள் (குரு பரம்பரை) / pŏtu taṉiyaṉkal̤ (guru paramparai)

லக்ஷ்மீ நாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

lakṣmī nāta samārampām nāta yāmuna matyamām
asmatācārya paryantām vante kuru paramparām
கூரத்தாழ்வான் / kūrattāḻvāṉ

Word by word meaning

लक्ष्मीनाथ (லக்ஷ்மீநாத2) மஹாலக்ஷ்மியின் நாதனான நாராயணன்; समारम्भां (ஸமாரம்பா3ம்) தொடக்கமாகவும்; नाथयामुन (நாத2யாமுந) நாதமுனிகள் ஆளவந்தார் இவர்களை; मध्यमाम् (மத்4யமாம்) நடுவாகவும்; अस्मद् (அஸ்மதா3சார்யபர்யந்தாம்) நம்முடைய; आचार्यपर्यन्तां ஆசார்யர்கள் ஈராகவும், உள்ள; गुरुपरंपराम् (கு3ருபரம்பராம்) குருபரம்பரையை; वन्दे (வந்தே3) வணங்குகிறேன்

பொது தனியன்கள் (எம்பெருமானார்) / pŏtu taṉiyaṉkal̤ (ĕmpĕrumāṉār)

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்மருக்ம
வ்யாமோ ஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ
ராமாநுஜஸ்ய சரெணள ஸரணம் ப்ரபத்யே

yo nityam acyuta patāmpuja yukmarukma
vyāmo hatas tatitarāṇi truṇāya mene
asmat kuror pakavatosya tayaika sinto
rāmānujasya carĕṇal̤a saraṇam prapatye
கூரத்தாழ்வான் / kūrattāḻvāṉ

Word by word meaning

य: எவர்; नित्यमच्युत எப்பொழுதும் எம்பெருமானின்; पदाम्बुज युग्मरुग्म தங்கமயமான திருவடித் தாமரைகளில்; व्यामोहत: மோஹித்து; तत् इतराणि தன்னை பரிகொடுத்தவரோ; तृणाय मेने மற்றவைகளை புல்லுக்கு சமமாக நினைத்தவரோ; अस्मद् गुरो: நம்முடைய ஆசார்யரும்; अस्य दयैक सिन्धो: கருணை கடலாகவே வடிவெடுத்தவரும்; भगवत: எம்பெருமானுக்கு ஒப்பானவருமான; रामानुजस्य இராமானுசருடைய; चरणौ திருவடிகளை; शरणं प्रपद्ये புகலிடமாகப் பற்றுகிறேன்

பொது தனியன்கள் (நம்மாழ்வார்) / pŏtu taṉiyaṉkal̤ (nammāḻvār)

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியேமந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபேதர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா

mātā pitā yuvatayas tanayā vipūti:
sarvam yateva niyemana matanvayānām
ātyasya na: kulapetar vakul̤āpirāmam
śrīmat tataṅkri yukal̤am praṇamāmi mūrtnā
ஆளவந்தார் / āl̤avantār

Word by word meaning

य: எந்த திருவடித்தாமரைகள்; देव नियमेन எம்பெருமான் கிருபையால்; मत् मदन्वयानाम् எம் சந்ததியினருக்கு; माता पिता தாய்-தந்தையர்; युवतय: மனைவி; तनया विभूति: மக்கள், பெரும் செல்வம்; सर्वं ஆகிய எல்லாமாக இருக்கிறதோ; आद्यस्य नः பிரபன்னஜன கூடஸ்தரான நம்முடைய; कुलपते குலங்களுக்குத் தலைவரும்; वकुलाभिरामं மகிழம்பூ மாலை அணிந்தவருமான; श्रीमतदंघ्रियुगलं நம்மாழ்வாரின் திருவடிகளை; प्रणामामि मूर्धना தலையால் வணங்குகிறேன்

பொது தனியன்கள் (ஆழ்வார்கள் உடையவர்) / pŏtu taṉiyaṉkal̤ (āḻvārkal̤ uṭaiyavar)

பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய பட்ட நாத
ஸ்ரீ பக்திஸார குலேசகர யோகிவாஹாந்
பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ர மிஸ்ராந்
ஸ்ரீமத் பராங்குஸநிம் ப்ரணேதாஸ்மி நித்யம்

pūtam sarasca mahatāhvaya paṭṭa nāta
śrī paktisāra kulecakara yokivāhān
paktāṅkrireṇu parakāla yatīntra misrān
śrīmat parāṅkusanim praṇetāsmi nityam
ஸ்ரீபராசர பட்டர் / śrīparācara paṭṭar

Word by word meaning

भूतं பூதத்தாழ்வார்; सरस्य பொய்கையாழ்வார்; महदाह्वय பேயாழ்வார்; भट्टनाथ பெரியாழ்வார்; श्री ஆண்டாள்; भक्तिसार திரும்ழிசையாழ்வார்; कुलशेखर குலசேகராழ்வார்; योगिवाहान् திருப்பாணாழ்வார்; भक्तांघ्रिरेणु தொண்ரடிப்பொடியாழ்வார்; परकाल திரும்ங்கையாழ்வார்; यतीन्द्र இராமானுசர்; मिश्रान् மதுரகவியாழ்வார்; श्रीमत्परांकुश அனைவரையும் அங்கங்களாக உடைய; मुनिं அங்கியான நம்மாழ்வாரை; नित्यम् எப்பொழுதும்; प्रणत: अस्मि வணங்குகிறேன்

திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள் / Thiruppallāṇḍu, Periyāzhvār Thirumozhi Taṉiyaṉkal̤

குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான்
நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக
ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத்
த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி

kurumuka maṉatītya prāka vetāṉaceṣāṉ
narapatiparikluptam cūlkamātātukāmaka
cvacuramamaravantyam raṅkaṉātacya cākṣāt
tvijakulatilakam tam viṣṇucittam namāmi
நாதமுனிகள் / nātamuṉikal̤

Word by word meaning

गुरुमुखम् ஒரு குருவிடமும் பயிலாமலே; अनधीत्य எம்பெருமான் கிருபையாலேயே; नरपतिपरिक्लृप्तं வல்லபதேவனால் ஏற்படுத்தப்பட்ட; शुल्कं आदातुकामः வித்வத் சபையில் பரிசை பெற விரும்பிய; अशेषान् वेदान् அனைத்து வேதங்களையும்; प्राह விளக்கி, விஷ்ணுவே பரம் பொருள் என்று ஸ்தாபித்து; अमरवन्द्यं தேவர்களால் வணங்கப்பட்டவரும்; रंगनाथस्य ஸ்ரீரங்கநாதருக்கே; साक्षात् श्वशुरम् மாமனாரானவரும்; द्विजकुलतिलकं அந்தணத் தலைவருமான; विष्णुचित्तं तं விஷ்ணுசித்தரை, பெரியாழ்வாரை; नमामि வணங்குகிறேன்

திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள் / Thiruppallāṇḍu, Periyāzhvār Thirumozhi Taṉiyaṉkal̤

மின்னார் தட மதிள் சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தானென்றுரைத்தோம், கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே வந்து

miṉṉār taṭa matil̤ cūḻ villiputtūrĕṉṟu ŏrukāl
cŏṉṉār kaḻaṟkamalam cūṭiṉom - muṉṉāl̤
kiḻiyaṟuttāṉĕṉṟuraittom, kīḻmaiyiṉiṟ cerum
vaḻiyaṟuttom nĕñcame vantu
பாண்டிய பட்டர் / pāṇṭiya paṭṭar

Word by word meaning

சொன்னார் கழல் கமலம் சூடினோம் முன்னாள்; மின்னார் தட ஒளிமயமான பெரிய; மதிள் சூழ் மதிள்களால் சூழ்ந்த; வில்லிபுத்தூர் வில்லிபுத்தூர்; என்று ஒருக்கால் என்று ஒருமுறையாகிலும்; சொன்னார் சொன்ன அடியார்களின்; கழல் கமலம் பாத கமலங்களை; சூடினோம் தலையில் சூடினோம்; முன்னாள் முன்பு பாண்டியமன்னன் ஏற்படுத்திய; சபையில் விஷ்ணுவே பரம் பொருள் என்று கூறி; கிழி அறுத்தான் பொற்கிழியை அறுத்தவர் பெரியாழ்வார்; என்று உறைத்தோம் என்று உறைத்தோம்; நெஞ்சமே வந்து நெஞ்சமே உன் அநுகூலத்துக்காக; கீழ் மேனிச் சேரும் நரகத்தில் சேரும்படியான; வழி மார்க்கத்தை; அறுத்தோம் அறுத்தோம் என்கிறார்

திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள் / Thiruppallāṇḍu, Periyāzhvār Thirumozhi Taṉiyaṉkal̤

பாண்டியன் கொண்டாடப் பட்டர் பிரான் வந்தானென்று
ஈண்டிய சங்கமெடுத்தூத - வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடையபற்று

pāṇṭiyaṉ kŏṇṭāṭap paṭṭar pirāṉ vantāṉĕṉṟu
īṇṭiya caṅkamĕṭuttūta - veṇṭiya
vetaṅkal̤oti viraintu kiḻiyaṟuttāṉ
pātaṅkal̤ yāmuṭaiyapaṟṟu
பாண்டிய பட்டர் / pāṇṭiya paṭṭar

Word by word meaning

ஊத முழங்க; வேண்டிய காலத்துக்கு தேவைப்பட்ட; வேதங்கள் வேதார்த்தங்களை; ஓதி அதன் பொருளை தெள்ளத் தெளியச்சொல்லி; விரைந்து கிழி விரைந்து பொற்கிழியை; அறுத்தான் அறுத்தவனின்; பாதங்கள் அந்தத் திருவடிகளை; யாமுடைய நம்முடைய புகலிடம் என்று; பற்று பற்றுங்கள்; பாண்டியன் கொண்டாட பாண்டிய மன்னன் கொண்டாட; பட்டர்பிரான் வைணவர்களின் தலைவன்; வந்தான் என்று வந்தான் என்று; ஈண்டிய சங்கம் எடுத்து அநேக வெற்றிச் சங்குகள்

ஸ்ரீ ஆண்டாள் தனியன்கள் / śrī Āṇḍāl taṉiyaṉkal̤

நீளா துங்க ஸ்தந கிரிதடீ ஸுப்த ம்உ(மு)த்போத்ய க்ருக்ஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி ஸத ஸரஸ் ஸித்த மத்யா பயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யாபலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்துபூய:

nīl̤ā tuṅka stana kiritaṭī supta mutpotya krukṣṇam
pārārtyam svam sruti sata saras sitta matyā payantī
svocciṣṭāyām sraji nikal̤itam yāpalāt krutya puṅkte
kotā tasyai nama itam itam pūya evāstupūya:
பராசர பட்டர் / parācara paṭṭar

Word by word meaning

नीलातुंग நப்பின்னையின் அழகிய; स्तनगिरितटी மலைபோன்ற மார்ப்பின் மீது; सुप्तम् कृष्णं उद्बोद्य உறங்கும் எம்பெருமானை எழுப்பி; श्रुति शत நூற்றுகணக்கான வேதாங்கங்களாலும்; शिरस्सिद्धम् உபநிஷத்துக்களாலும் நிலை நாட்டப்பட்ட; पाराद्यं स्वं தன்னுடைய அடிமைத்தனத்தை, சேஷத்வத்தை; अध्यापयन्ती உணர்த்தும் வகையில்; स्व उच्छिष्टायां தான் முதலில் அணிந்து அழகு பார்த்த; स्रजि निगलितं மாலைகளில் பெருமானைக் கட்டிப்போட்டு; यापलात्कृत्य எவள் அந்த பலத்தைக் கொண்டு கண்ணனை; भुंक्ते அநுபவித்தாளோ; गोदा तस्यै அந்த பூமிபிராட்டியான ஆண்டாளுக்கு; नम इदमिदं இந்த நமஸ்காரங்கள்; भूय एवास्तु भूय: மீண்டும் மீண்டும் உறித்தாகுக

ஸ்ரீ ஆண்டாள் தனியன்கள் / śrī Āṇḍāl taṉiyaṉkal̤

அன்னவயற் புதுவை * ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் * - இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு

aṉṉavayaṟ putuvai * āṇṭāl̤ araṅkaṟkup
paṉṉu tiruppāvaip palpatiyam * - iṉṉicaiyāl
pāṭikkŏṭuttāl̤ naṟpāmālai * pūmālai
cūṭikkŏṭuttāl̤aic cŏllu
உய்யக்கொண்டார் / uyyakkŏṇṭār

Word by word meaning

அன்னம் ஹம்ஸங்கள் ஸஞ்சரிக்கின்ற; வயல் வயலை உடைய; புதுவை ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த; ஆண்டாள் அரங்கர்க்கு பெரிய பெருமாள் விஷயமாக; பன்னு ஆராய்ந்து அருளிச்செய்த; திருப்பாவை திருப்பாவையாகிற; பல் பதியம் பல பாட்டுக்களை; இன் இசையால் செவிக்கினிய இசையால்; பாடிக் கொடுத்தாள் பாடிக் கொடுத்தவளாய்; நற்பாமாலை நல்ல பாசுரங்களாலான பாமாலையையும்; பூமாலை பூக்களால் தொடுத்த பூமாலையையும்; சூடி தான் சூடி அழகு பார்த்த பின்; கொடுத்தாளை ஸமர்ப்பித்தவளை; சொல்லு அநுஸந்திப்பாய்

ஸ்ரீ ஆண்டாள் தனியன்கள் / śrī Āṇḍāl taṉiyaṉkal̤

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! * தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்! * நாடி நீ
வேங்கடவற்கு கென்னை விதியென்றவிம்மாற்றம் *
நாம்கடவா வண்ணமே நல்கு

cūṭikkŏṭutta cuṭarkkŏṭiye! * tŏlpāvai
pāṭi arul̤avalla palval̤aiyāy! * nāṭi nī
veṅkaṭavaṟku kĕṉṉai vitiyĕṉṟavimmāṟṟam *
nāmkaṭavā vaṇṇame nalku
உய்யக்கொண்டார் / uyyakkŏṇṭār

Word by word meaning

பாவை நோன்பை; சூடி பூமாலையை சூடி; கொடுத்த பெரிய பெருமாளுக்கு ஸமர்ப்பித்த; சுடர் கொடியே பொற்கொடி போன்ற வடிவழகை உடையவளே!; தொல் பழமையான; பாடி திருப்பாவை என்னும் திவ்ய பிரபந்தத்தால் பாடி; அருளவல்ல உபகரிக்க வல்லவளாய்; பல் வளையாய் பலவகை வளையல்களை அணிந்தவளே; நீ நாடி மன் மதனான நீ ஆராய்ந்து; வேங்கடவர்க்கு திருவேங்கடவர்க்கு; என்னை வாழ்க்கைப் படுத்தவேண்டும் என்று ஆசைபடுகிற என்னை; விதி அந்தரங்க கைங்கர்யம் பண்ணும்படி விதிக்க வேண்டும்; என்ற நாடி நீ என்று நீ அருளிச்செய்த; இ மாற்றம் இந்த பாசுரத்தை; நாம் உனக்கு அடிமையாய் இருக்கிற நாங்கள்; கடவாவண்ணம் மீராததபடி; நல்கு அருள வேண்டும்

நாச்சியார் திருமொழி தனியன்கள் / Nāchiyār Thirumozhi taṉiyaṉkal̤

கோலச் சுரி சங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள் * தென் திருமல்லி நாடி * செழுங்குழல் மேல்
மாலத்தொடை தென்னரங்கருக்கீயும் மதிப்புடைய
சோலைக்கிளி * அவள் தூய நற்பாதம் துணை நமக்கே

kolac curi caṅkai māyaṉ cĕvvāyiṉ kuṇam viṉavum
cīlattaṉal̤ * tĕṉ tirumalli nāṭi * cĕḻuṅkuḻal mel
mālattŏṭai tĕṉṉaraṅkarukkīyum matippuṭaiya
colaikkil̤i * aval̤ tūya naṟpātam tuṇai namakke
திருக்கண்ண மங்கை ஆண்டான் / tirukkaṇṇa maṅkai āṇṭāṉ

Word by word meaning

சீலத்தனள் விருப்பம் உடையவளும்; தென் திருமல்லி நாடி தென் திருமல்லி நாட்டுத் தலைவியும்; செழுங்குழல் செழுமை மிக்க தன் கூந்தலில்; மேல் பூச்சூட்டி இருப்பவளும்; தென்னரங்கருக்கு கண்ணனுக்கு; மாலத் தொடை மாலையை; ஈயும் ஸமர்ப்பிக்க வேண்டும் என்ற; மதிப்புடைய மதிப்பையும் மேன்மையையும் உடைய; சோலைக் கிளி சோலைக் கிளி போன்ற; அவள் தூய தூய இனிய பேச்சை உடையவளுமான; நல் பாதம் ஆண்டாளின் புனிதமான திருவடிகளே; துணை நமக்கே நமக்கு புகலிடம்; கோலச்சுரி அழகிய வரிகளையுடைய; சங்கை பாஞ்சஜன்ய சங்கை நோக்கி; மாயன் அதனிடத்திலிருந்து மாயக்கண்ணனின்; செவ்வாயின் சிவந்த அதரத்தின்; குணம் வினவும் குணவிசேஷங்களைக் அறியும்

நாச்சியார் திருமொழி தனியன்கள் / Nāchiyār Thirumozhi taṉiyaṉkal̤

அல்லி நாள் தாமரை மேலாரணங்கினின் துணைவி *
மல்லி நாடாண்ட மட மயில் - மெல்லியலாள் *
ஆயர் குல வேந்தனாகத்தாள் * தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு

alli nāl̤ tāmarai melāraṇaṅkiṉiṉ tuṇaivi *
malli nāṭāṇṭa maṭa mayil - mĕlliyalāl̤ *
āyar kula ventaṉākattāl̤ * tĕṉputuvai
veyar payanta vil̤akku
திருக்கண்ண மங்கை ஆண்டான் / tirukkaṇṇa maṅkai āṇṭāṉ

Word by word meaning

அல்லி நாள் அன்று அலர்ந்த; தாமரை மேல் தாமரைப் பூவின் மேல்; ஆரணங்கின் சிறந்த ஸ்வபாவமுடைய; இன் துணைவி திருமகளுக்கு, இனிய தோழியாகவும்; மல்லி நாடாண்ட மல்லி நாட்டை ஆ ண்ட; மடமயில் அழகிய மயில் போன்றவளாயும்; மெல்லியலாள் மென்மையான ஆண்டாள்; ஆயர்குல ஆயர்குல; வேந்தன் தலைவனான கண்ணனின்; ஆகத்தாள் திருமேனியில் விருப்பம் கொண்டவளாய்; தென்புதுவை ஸ்ரீவில்லிபுத்தூரில்; வேயர் பயந்த பெரியாழ்வாரின் மகளாக வேயர்குல; விளக்கு விளக்காக இருந்தாள்

பெருமாள் திருமொழி தனியன்கள் / pĕrumāl̤ tirumŏḻi taṉiyaṉkal̤

இன்னமுதமூட்டுகேன் இங்கே வா பைங்கிளியே! *
தென்னரங்கம் பாட வல்ல சீர்ப்பெருமாள் * பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர் கோன் * எங்கள்
குலசேகரன் என்றே கூறு

iṉṉamutamūṭṭukeṉ iṅke vā paiṅkil̤iye! *
tĕṉṉaraṅkam pāṭa valla cīrppĕrumāl̤ * pŏṉṉañ
cilaicer nutaliyarvel̤ ceralar koṉ * ĕṅkal̤
kulacekaraṉ ĕṉṟe kūṟu
உடையவர் / uṭaiyavar

Word by word meaning

பைங்கிளியே! பச்சை நிற கிளியே!; இன்னமுதம் இனிமையான அமுதத்தை உண்ண; ஊட்டுகேன் கொடுக்கிறேன்; இங்கேவா என் அருகில் வருவாயாக; தென்னரங்கம் தென் திருவரங்கத்தைக் குறித்து; பாடவல்ல இனிய கவிதைகள் அருளிச்செய்யவல்லவரான; சீர் கல்யாண குணங்கள் நிறைந்த; பெருமாள் பெருமாள் என்ற திருநாமத்தை உடையவரும்; பொன்னின் சிலை சேர் வில் போன்ற புருவமுடையவரும்; நுதலியர் வேள் பெண்களுக்கு மன்மதன் போன்றவரும்; சேரலர்கோன் சேரகுல அரசரும்; எங்கள் குல சேகரன் எங்கள் குலத்துக்கு பூஷணமானவர்; என்றே கூறு என்றே வாயாரக் கூறு

பெருமாள் திருமொழி தனியன்கள் / pĕrumāl̤ tirumŏḻi taṉiyaṉkal̤

ஆரம் கெடப்பரனன்பர் கொள்ளாரென்று * அவர்களுக்கே
வாரங் கொடு குடப்பாம்பில் கையிட்டவன் * மாற்றலரை
வீரங் கெடுத்த செங்கோற் கொல்லி காவலன் வில்லவர் கோன் *
சேரன் குலசேகரன் முடிவேந்தர் சிகாமணியே

āram kĕṭapparaṉaṉpar kŏl̤l̤ārĕṉṟu * avarkal̤ukke
vāraṅ kŏṭu kuṭappāmpil kaiyiṭṭavaṉ * māṟṟalarai
vīraṅ kĕṭutta cĕṅkoṟ kŏlli kāvalaṉ villavar koṉ *
ceraṉ kulacekaraṉ muṭiventar cikāmaṇiye
மணக்கால் நம்பி / maṇakkāl nampi

Word by word meaning

ஆரம் மந்திரிகளின் சூழ்ச்சியால் ஹாரம்; கெட காணாமல் போக; பரன் அன்பர் வைதிகர்கள்; என்று என்று சொல்லி; அவர்களுக்கே அடியார்கள் விஷயத்தில்; வாரம் கொடு பக்ஷபாதம் பூண்டு; குடப்பாம்பில் பாம்புக் குடத்தில்; கை இட்டவன் கை இட்டவர்; மாற்றலரை விரோதிகளின்; வீரம் கெடுத்த வீர்யத்தைக் கெடுத்த; செங்கோல் செங்கோலை உடைய; கொல்லி காவலன் கொல்லி நகருக்கு தலைவரான; வில்லவர் மற்றுமுள்ள அரசர்களுக்கும்; கோன் அதிபதியான; சேரன் குலசேகரன் சேரகுலத்து குலசேகரன்; முடி வேந்தர் முடி சூட்டின அரசர்களுக்கு; சிகாமணியே சிகாமணி போன்று குலசேகரப்பெருமாள் ஆவர்; கொள்ளார் களவு செய்யமாட்டார்கள்

திருச்சந்தவிருத்த தனியன்கள் / Thiruchanda Virutham taṉiyaṉkal̤

தருச்சந்தப் பொழில் தழுவு தாரணியின் துயர்தீர *
திருச்சந்த விருத்தம் செய் திருமழிசைப் பரன்வருமூர் *
கருச்சந்தும் காரகிலும் கமழ் கோங்கும் மணநாறும் *
திருச்சந்தத்துடன் மருவு திருமழிசை வளம்பதியே

taruccantap pŏḻil taḻuvu tāraṇiyiṉ tuyartīra *
tiruccanta viruttam cĕy tirumaḻicaip paraṉvarumūr *
karuccantum kārakilum kamaḻ koṅkum maṇanāṟum *
tiruccantattuṭaṉ maruvu tirumaḻicai val̤ampatiye
திருக்கச்சி நம்பிகள் / tirukkacci nampikal̤

Word by word meaning

தரு கற்பக மரம்; சந்தம் சந்தன மரம் ஆகியவற்றால் நிறைந்த; பொழில் தழுவு சோலைகளால் சூழ்ந்த; தாரணியின் உலகிலுள்ளவர்களுடைய; துயர்தீர துயரம் தீர; திருச்சந்த விருத்தம் திருச்சந்த விருத்தம் என்னும்; செய் திவ்யபிரபந்தத்தை அருளிச்செய்த; திருமழிசைப் பரன் திருமழிசைப் பிரான்; வருமூர் அவதரித்த ஊர் எது என்றால்; கருச்சந்தும் சந்தன மரங்களும்; கார் அகிலும் கருத்த அகிற்கட்டைகளும்; கமழ் கோங்கும் மணம் கமழும் கோங்குமரங்களும்; மணம் நாறும் பரிமளம் வீசப்பெற்ற; திருச்சந்தத்துடன் திருமகள் ஆர்வத்தோடு; மருவு பொருந்தி வாழும்; திருமழிசை திருமழிசை என்னும்; வளம் பதியே செல்வம் மிக்க திருப்பதியேயாகும்

திருச்சந்தவிருத்த தனியன்கள் / Thiruchanda Virutham taṉiyaṉkal̤

உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து * தம்மில்
புலவர் புகழ்க்கோலால் தூக்க * - உலகுதன்னை
வைத்தெடுத்த பக்கத்தும் * மாநீர் மழிசையே
வைத் தெடுத்த பக்கம் வலிது

ulakum maḻicaiyum ul̤l̤uṇarntu * tammil
pulavar pukaḻkkolāl tūkka * - ulakutaṉṉai
vaittĕṭutta pakkattum * mānīr maḻicaiye
vait tĕṭutta pakkam valitu
திருக்கச்சி நம்பிகள் / tirukkacci nampikal̤

Word by word meaning

புலவர் வேதம் அறிந்த ரிஷிகள்; உலகும் திருமழிசை தவிர மற்ற எல்லா உலகங்களையும்; மழிசையும் திருமழிசையையும்; தம்மில் தனித்தனியே; உள் உணர்ந்து தம் மனதில் ஆராய்ந்து; புகழ்க்கோலால் புகழை அளக்கும் துலாக்கோலை; தூக்க நாட்டி நிறுக்க; உலகு தன்னை உலகங்களை எல்லாம்; வைத்து எடுத்த வைத்து நிறுத்தப்பட்ட; பக்கத்தும் தட்டைக்காட்டிலும்; மாநீர் சிறந்த நீர்வளம் மிக்க; மழிசையே திருமழிசையை; வைத்தெடுத்த வைத்து நிறுத்தப்பட்ட; பக்கம் வலிது தட்டே வலிமை மிக்கதாய் இருந்தது

திருப்பள்ளியெழுச்சி தனியன்கள் / Thiruppaḷḷiezhuchi taṉiyaṉkal̤

தமேவ மத்வா பரவாஸுதேவம்
ரங்கேசயம் ராஜ வதர்ஹணீயம்
ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்தி மாலாம்
பக்தாங்க்ரி ரேணும் பகவந்தமீடே

tameva matvā paravāsutevam
raṅkecayam rāja vatarhaṇīyam
prāpotakīm yokruta sūkti mālām
paktāṅkri reṇum pakavantamīṭe
திருமலையாண்டான் / tirumalaiyāṇṭāṉ

Word by word meaning

எந்த ஒரு ஆழ்வார்; राजवत् अर्हणीयं அரசனைப்போல் பூஜிக்கத்தக்கவராய்; रंगेशयं ஸ்ரீ ரங்கநாதனையே; परवासुदेवं பரம புருஷனான பரவாஸுதேவனாக; तं एव அவரையே; मत्वा நினைத்து; आकृत सूक्तिमालां பாசுரங்களாலான மாலையை; प्राबोधिकीं திருப்பள்ளி யெழுச்சி என்னும் பாமாலை பாடி எழுப்பி; भक्तांघ्रिरेणुं அடியார்களின் பாத துகள்களையே தலையில் தரிக்கும்; भगवन्तं பகவானாகிய தொண்டரடிப்பொடி ஆழ்வாரை; ईडे வணங்குகிறேன்

திருப்பள்ளியெழுச்சி தனியன்கள் / Thiruppaḷḷiezhuchi taṉiyaṉkal̤

மண்டங்குடி யென்பர் மாமரையோர் மன்னியசீர்
தொண்டரடிப் பொடி தொன்னகரம் * வண்டு
திணர்த்த வயல் தென்னரங்கத்தம்மானைப் * பள்ளி
யுணர்த்தும் பிரானுதித்தவூர்

maṇṭaṅkuṭi yĕṉpar māmaraiyor maṉṉiyacīr
tŏṇṭaraṭip pŏṭi tŏṉṉakaram * vaṇṭu
tiṇartta vayal tĕṉṉaraṅkattammāṉaip * pal̤l̤i
yuṇarttum pirāṉutittavūr
திருவரங்கப் பெருமாளறையர் / tiruvaraṅkap pĕrumāl̤aṟaiyar

Word by word meaning

வண்டு திணர்த்த வண்டுகள் நிறைந்த; வயல் வயல்களால் சூழ்ந்த; தென்னரங்கத்து அழகிய திருவரங்கத்தில்; பள்ளி உணர்த்தும் சயனித்திருக்கும்; அம்மானை ஸ்ரீரங்கநாதனை; பிரான் எம்பிரானை அனவரதமும் வணங்கும்; தொண்டரடிப்பொடி தொண்டரடிப்பொடி ஆழ்வார்; உதித்த ஊர் அவதரித்த ஊர்; மன்னிய சீர் சீர்மையுடைய; மண்டன் குடி மண்டன் குடி என்னும்; தொன்னகரம் என்பர் புராதனமான நகரமாகும் என்பர்; மாமறையோர் வேதம் அறிந்த பெரியோர்

திருமாலை தனியன்கள் / Thirumālai taṉiyaṉkal̤

மற்றொன்றும் வேண்டா மனமே! * மதிளரங்கர்
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ் * உற்ற
திருமாலைபாடும் சீர்த்தொண்டரடிப் பொடி யெம்
பெருமானை * எப்பொழுதும் பேசு

maṟṟŏṉṟum veṇṭā maṉame! * matil̤araṅkar
kaṟṟiṉam meytta kaḻaliṇaikkīḻ * uṟṟa
tirumālaipāṭum cīrttŏṇṭaraṭip pŏṭi yĕm
pĕrumāṉai * ĕppŏḻutum pecu
திருவரங்கப் பெருமாளறையர் / tiruvaraṅkap pĕrumāl̤aṟaiyar

Word by word meaning

மனமே! மனமே!; மற்று ஒன்றும் வேறு ஒன்றையும்; வேண்டா நீ விரும்பவேண்டாம்; மதிளரங்கர் மதில் அரங்கத்து பெருமானின்; கற்றினம் கன்றுகளை; மேய்த்த மேய்த்த; கழலினைக்கீழ் திருவடிகளின் கீழ்; உற்ற பணிந்திருக்கும்; திருமாலை திருமாலை என்ற பிரபந்தத்தை; பாடும் பாடியருளிய; சீர்த் சிறப்புடைய; தொண்டரடிப்பொடி தொண்டரடிப்பொடி; எம்பெருமானை ஆழ்வாரை; எப்பொழுதும் சதா சர்வகாலமும்; பேசு நினைந்திரு

அமலனாதிபிரான் தனியன்கள் / Amalanādipirān taṉiyaṉkal̤

ஆபாத சூடமநுபூய ஹரிம் ஸயாநம்
மத்யேக வேரது ஹி துர் முதி தாந்தராத்மா *
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந் தராணாம்
யோ நிச்சிகாய மநவை முநிவாஹநந்தம்

āpāta cūṭamanupūya harim sayānam
matyeka veratu hi tur muti tāntarātmā *
atraṣṭrutām nayanayor viṣayān tarāṇām
yo niccikāya manavai munivāhanantam
பெரிய நம்பிகள் / pĕriya nampikal̤

Word by word meaning

य: எந்த திருப்பாணாழ்வார்; कवेरदुहितु: திருக்காவேரியின்; मध्ये நடுவில்; शयानं हरिं சயனித்திருக்கும் ஸ்ரீரங்கநாதரை; आपादचूडम् திருவடி முதல் திருமுடி வரை; अनुभूय கண் குளிர அனுபவித்து; मुदित अन्तरात्मा மகிழ்ந்த சிந்தையராய்; विषयान्तराणां அப்பெருமானைத்தவிர வேறு விஷயங்களை; नयनयो अद्रष्टतां தம் கண்கள் காண்மாட்டாமையை; निश्चिकाय அறுதியிட்டு அருளினாரோ; मुनिवाहनं லோகஸாரங்க முனியை வாஹனமாகக்கொண்ட; तं அப்படிப்பட்ட திருப்பாணாழ்வாரை; मनवे வணங்கக்கடவேன்

அமலனாதிபிரான் தனியன்கள் / Amalanādipirān taṉiyaṉkal̤

காட்டவே கண்ட பாத கமலம் நல்லாடை யுந்தி *
தேட்டருமுதர பந்தம் திருமார்வு கண்டம் செவ்வாய் *
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து *
பாட்டினாற் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே

kāṭṭave kaṇṭa pāta kamalam nallāṭai yunti *
teṭṭarumutara pantam tirumārvu kaṇṭam cĕvvāy *
vāṭṭamil kaṇkal̤ meṉi muṉiyeṟit taṉi pukuntu *
pāṭṭiṉāṟ kaṇṭu vāḻum pāṇar tāl̤ paraviṉome
திருமலை நம்பிகள் / tirumalai nampikal̤

Word by word meaning

முனி ஏறி லோகஸாரங்க முனிவரின் தோள் மீது ஏறி; தனிப்புகுந்து தனியே உள்ளே புகுந்து; காட்டவே காண்பித்தவாறே; கண்ட கண்டு வணங்கிய; பாட்டினால் பாசுரங்களையும் பாடிக்கொண்டு ஆனந்தித்து; பாத கமலம் தாமரை போன்ற திருவடிகளும்; நல்லாடை உந்தி பீதாம்பரமும், நாபியும்; தேட்டரும் உதர பந்தம் அரிய அரை நாணும்; திருமார்பு திருமகள் வாழும் மார்பும்; கண்டம் கழுத்தும்; செவ்வாய் சிவந்த அதரமும்; வாட்டரில் கண்கள் சோர்வு இல்லாத கண்களும்; மேனி ஆகிய இவற்றோடு திருமேனியை; கண்டு வாழும் பாணர் அனுபவித்த ஆழ்வாரின்; தாள் திருவடிகளை; பரவினோமே துதித்து வணங்கப் பெற்றோம்

கண்ணிநுண்சிறுத்தாம்பு தனியன்கள் / Kaṇṇiṇuṇchiṛuthāmbu taṉiyaṉkal̤

அவிதித விஷயாந்தர ஸ்ஸாடாரே
உப நிஷதாம் உபகா நமாத்ர போக:
அபிச குண வஸாத் ததேக ஸேஷீ
மதுரகவிர் ஹ்ருதயே மமாவி ரஸ்து

avitita viṣayāntara ssāṭāre
upa niṣatām upakā namātra poka:
apica kuṇa vasāt tateka seṣī
maturakavir hrutaye mamāvi rastu
ஸ்ரீமந் நாதமுனிகள் / śrīman nātamuṉikal̤

Word by word meaning

शठारे: நம்மாழ்வாரைத் தவிர; अविदित विषयान्तर: வேறு விஷங்களை அறியாதவரான; उपनिषदाम् திரமிடோபநிஷத்தான திருவாய்மொழியை; उपगान मात्र பாடுவது ஒன்றையே; भोग: பேரின்பமாகக் கொண்டவரும்; अपि च மேலும்; गुणवशात् குணமடியாகவும்; त्तदेकशेषी நம்மாழ்வார் ஒருவருக்கே ஆட்பட்டவராகவும்; मधुरकवि: மதுரகவி ஆழ்வார்; मम हृदये என் மனதில்; आविरस्तु வீற்றிருக்கட்டும்

கண்ணிநுண்சிறுத்தாம்பு தனியன்கள் / Kaṇṇiṇuṇchiṛuthāmbu taṉiyaṉkal̤

வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த *
மாறன் சடகோபன் வண் குருகூர் - ஏறு *
எங்கள் வாழ்வா மென்றேத்தும் மதுரகவியார் *
எம்மை ஆள்வார் அவரே அரண்

veṟŏṉṟum nāṉaṟiyeṉ vetam tamiḻ cĕyta *
māṟaṉ caṭakopaṉ vaṇ kurukūr - eṟu *
ĕṅkal̤ vāḻvā mĕṉṟettum maturakaviyār *
ĕmmai āl̤vār avare araṇ
ஸ்ரீமந் நாதமுனிகள் / śrīman nātamuṉikal̤

Word by word meaning

வேறொன்றும் நம்மாழ்வார் தவிர வேறொன்றும்; நானறியேன் நான் அறியேன்; வேதம் வேதார்த்தங்களை; தமிழ் செய்த தமிழில் அருளிச்செய்த; மாறன் சடகோபன் மாறன் என்னும் நம்மாழ்வாரும்; வண்குருகூர் அழகிய திருகுருகூரில் அவதரித்தவரும்; ஏறு, எங்கள் எங்கள் தலைவரும்; வாழ்வாம் என்றேத்தும் எமக்கு உஜ்ஜீவனராவர் என்று; மதுரகவியார் மதுரகவி ஆழ்வார்; எம்மை ஆள்வார் நம்மை ஆள்பவர்; அவரே அரண் அவரே நமக்குப் புகலிடம்

பெரிய திருமொழித் தனியன்கள் / Periya Thirumozhi taṉiyaṉkal̤

கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோக திவாகரம்
யஸ்ய கோபி: ப்ரகாஸாபி: ஆவித்யம் நிஹதம் தம:

kalayāmi kalitvamsam kavim loka tivākaram
yasya kopi: prakāsāpi: āvityam nihatam tama:
திருக்கோட்டியூர் நம்பி

Word by word meaning

यस्य गोभि: (யஸ்ய கோபி:) எவருடைய பாசுரங்களின்; प्रकाशाभि: (ப்ரகாஸாபி:) ஒளியினால்; आविद्यं (ஆவித்யம்) அஞானமாகிற இருள்; निहतं तम: (நிஹதம் தம்:) நீக்கப்பட்டதோ அப்படிப்பட்டவர்; लोकदिवाकरम् (லோக திவாகரம்) உலகத்துக்கே சூரியன் போன்றவரும்; कलिध्वंसं (கலித்வம்ஸம்) கலியின் கொடுமையைத் தொலைத்தவருமான; कविं (கவிம்) திருமங்கை ஆழ்வாரை; कलयामि (கலயாமி) வணங்குகிறேன்

பெரிய திருமொழித் தனியன்கள் / Periya Thirumozhi taṉiyaṉkal̤

வாழி பரகாலன் வாழி கலிகன்றி *
வாழி குறையலூர் வாழ் வேந்தன் - வாழியரோ *
மாயோனை வாள் வலியால் மந்திரங்கொள் *
மங்கையர் கோன் தூயோன் சுடர்மான வேல்

vāḻi parakālaṉ vāḻi kalikaṉṟi *
vāḻi kuṟaiyalūr vāḻ ventaṉ - vāḻiyaro *
māyoṉai vāl̤ valiyāl mantiraṅkŏl̤ *
maṅkaiyar koṉ tūyoṉ cuṭarmāṉa vel
எம்பெருமானார் / ĕmpĕrumāṉār

Word by word meaning

பரகாலன் புற மதத்தினருக்கு யமன் போன்ற; வாழி திருமங்கை ஆழ்வார் வாழ்க; கலிகன்றி கலியைக் கெடுத்த; வாழி திருமங்கை ஆழ்வார் வாழ்க; குறையலூர் வாழி குறையலூர் வாழும்படி; வாழ்வேந்தன் அதன் அரசனான; வாழியரோ திருமங்கை ஆழ்வார் வாழ்க; மாயோனை எம்பெருமானிடத்திலிருந்து; வாள்வலியால் தமது வாளின் வலிமையால்; மந்திரங்கொள் திருமந்திரத்தைப் பெற்றவரும்; தூயோன் அகப்புறத் தூய்மை உடையவருமான; மங்கையர்கோன் திருமங்கை ஆழ்வாரின்; சுடர்மான ஒளிமயமான பெருமையை உடைய; வேல்! வாழி வேல் வாழ்க

பெரிய திருமொழித் தனியன்கள் / Periya Thirumozhi taṉiyaṉkal̤

நெஞ்சுக்கிருள்கடி தீபம் அடங்கா நெடும் பிறவி
நஞ்சுக்கு நல்லவமுதம் *
தமிழ் நன்நூல் துறைகள் அஞ்சுக்கிலக்கியம் ஆரண சாரம் *
பரசமயப் பஞ்சுக்கனலின் பொரி *பரக்காலன் பனுவல்களே

nĕñcukkirul̤kaṭi tīpam aṭaṅkā nĕṭum piṟavi
nañcukku nallavamutam *
tamiḻ naṉnūl tuṟaikal̤ añcukkilakkiyam āraṇa cāram *
paracamayap pañcukkaṉaliṉ pŏri *parakkālaṉ paṉuvalkal̤e
ஆழ்வான் / āḻvāṉ

Word by word meaning

பரகாலன் திருமங்கை ஆழ்வாரின்; பனுவல்களே அருளிச்செயல்கள் எப்படி என்றால்; நெஞ்சுக்கு மனதில் உண்டான; இருள் இருளை; கடி தீபம் போக்கக்கூடிய திருவிளக்காம்; அடங்கா ஒன்றுக்கும் அடங்காத; நெடும் பிறவி நீண்ட ஸம்ஸாரத் துயறம் போன்ற; நஞ்சுக்கு விஷத்தை அறுப்பதற்கான; நல்ல அமுதம் நல்ல அமுதமாம்; தமிழ் தமிழில்; நன்னூல் நல்ல நூல்களில் சொல்லப்பட்ட; துறைகள் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்கிற; அஞ்சுக்கு ஐந்து இலக்கணங்களுக்கும்; இலக்கியம் இலக்கியமாம் இவை; ஆரண சாரம் வேதங்களின் ஸரமானவை; பர சமய பஞ்சுக்கு வேற்று மதங்களாகிய பஞ்சுக்கு; அனலின் பொறி நெருப்புப் பொறியாம்

பெரிய திருமொழித் தனியன்கள் / Periya Thirumozhi taṉiyaṉkal̤

எங்கள் கதியே! இராமானுச முனியே! *
சங்கை கெடுத்தாண்ட தவராசா! *
பொங்கு புகழ் மங்கையர் கோனீந்த மறையாயிரமனைத்தும் *
தங்கு மனம் நீ யெனக்குத்தா

ĕṅkal̤ katiye! irāmāṉuca muṉiye! *
caṅkai kĕṭuttāṇṭa tavarācā! *
pŏṅku pukaḻ maṅkaiyar koṉīnta maṟaiyāyiramaṉaittum *
taṅku maṉam nī yĕṉakkuttā
எம்பார் / ĕmpār

Word by word meaning

எங்கள் கதியே! எங்களுக்குப் புகலிடம் போன்றவரே!; இராமானுச முனியே! இராமானுச முனிவரே!; சங்கை ஸந்தேகங்களை; கெடுத்து ஆண்ட போக்கி காப்பாற்றிய; தவ ராசா! மகா தபஸ்வியே!; பொங்கு புகழ் உலகெங்கும் பரவிய புகழுடையவரான; மங்கையர்கோன் திருமங்கை ஆழ்வார்; ஈந்த தந்து அருளின; மறை ஆயிரம் வேத ரூபமான திருமொழி ஆயிரத்தையும்; அனைத்தும் மற்றுமுள்ள எல்லா பிரபந்தங்களையும்; தங்கு மனம் தரிக்கக்கூடிய மனதையும்; நீ எனக்குத் தா தாங்களெ தந்து அருள வேண்டும்; இராமானுசரிடம் எம்பாரின் பிரார்த்தனை

பெரிய திருமொழித் தனியன்கள் / Periya Thirumozhi taṉiyaṉkal̤

மாலைத் தனியே வழி பறிக்க வேணுமென்று *
கோலிப்பத விருந்த் கொற்றவனே! *
வேலை அணைத்தருளுங்கையாலடியேன் வினையை *
துணித் தருள வேணும் துணிந்து

mālait taṉiye vaḻi paṟikka veṇumĕṉṟu *
kolippata virunt kŏṟṟavaṉe! *
velai aṇaittarul̤uṅkaiyālaṭiyeṉ viṉaiyai *
tuṇit tarul̤a veṇum tuṇintu
எம்பார் / ĕmpār

Word by word meaning

மாலை எம்பெருமானை; தனியே தனி வழியிலே சென்று; வழி பறிக்க வழி பறிக்க; வேணும் என்று வேண்டும் என்று; கோலிப்பதி இருந்த மரத்தடியில் மறைந்திருந்த; கொற்றவனே! திருமங்கை மன்னனே!; வேலை அணைத்து வேலை அணைத்து; அருளும் கையால் அருளும் கையால்; அடியேன் வினையை அடியேன் பாபங்களை; துணிந்து துணித்து; அருள வேணும் அருள வேண்டும்

முதல்திருவந்தாதி தனியன்கள் / 1st Thiruvandāthi taṉiyaṉkal̤

கைதை சேர் பூம் பொழில் சூழ் கச்சி நகர் வந்துதித்த *
பொய்கைப் பிரான் கவிஞர் போரேறு * - வையத்து
அடியவர் வாழ அருந் தமிழந்தாதி *
படி விளங்கச் செய்தான் பரிந்து

kaitai cer pūm pŏḻil cūḻ kacci nakar vantutitta *
pŏykaip pirāṉ kaviñar poreṟu * - vaiyattu
aṭiyavar vāḻa arun tamiḻantāti *
paṭi vil̤aṅkac cĕytāṉ parintu
முதலியாண்டான் / mutaliyāṇṭāṉ

Word by word meaning

அரும் தமிழ் அரிய தமிழ் நூலான; கைதை சேர் தாழம்பூச் செடிகள் நிறைந்த; பூம்பொழில் சூழ் அழகிய சோலைகளால் சூழ்ந்த; கச்சி நகர் காஞ்சீபுரத்தில்; வந்து உதித்த அவதரித்த; பொய்கைப்பிரான் பொய்கைப்பிரான் என்னும்; கவிஞர் போரேறு கவிஞரான காளை போன்றவர்; வையத்து இவ்வுலகத்திலுள்ள; அடியவர்கள் வாழ அடியார்கள் வாழ; நூற்று அந்தாதி நூற்று அந்தாதியை; பரிந்து படி இவ்வுலகில் அன்புடன்; விளங்க செய்தான் அருளிச்செய்தார்

இரண்டாம் திருவந்தாதி தனியன்கள் / 2nd Thiruvandāthi taṉiyaṉkal̤

என் பிறவி தீர இறைஞ்சினேன், இன்னமுதா *
அன்பே தகளியளித்தானை *
நன் புகழ் சேர் சீதத்தார் முத்துகள் சேரும் *
கடல் மல்லைப் பூதத்தார் பொன்னங்கழல்

ĕṉ piṟavi tīra iṟaiñciṉeṉ, iṉṉamutā *
aṉpe takal̤iyal̤ittāṉai *
naṉ pukaḻ cer cītattār muttukal̤ cerum *
kaṭal mallaip pūtattār pŏṉṉaṅkaḻal
திருகுருகைப்பிரான் பிள்ளான் / tirukurukaippirāṉ pil̤l̤āṉ

Word by word meaning

முத்துக்கள் சேரும் முத்துக்கள் நிறந்த; கடல்மல்லை திருக்கடல்மல்லையில் அவதரித்த; பூதத்தார் பூதத்தாழ்வாரின்; பொன்னங்கழல் பொன் போன்ற அழகிய திருவடிகளை; என் பிறவி தீர என் பிறவி தீர; இறைஞ்சினேன் வாழ்த்தி வணங்கினேன்; இன்னமுதா இனிய அமுதமான; அன்பே தகளி அன்பே தகளி என்ற இரண்டாம் திருவந்தாதியை; அளித்தானை அருளிச்செய்த; நன் புகழ் சேர் சிறந்த புகழை உடைய; சீதத்தார் குளிர்ந்த

மூன்றாம் திருவந்தாதி தனியன்கள் / 3rd Thiruvandāthi taṉiyaṉkal̤

சீராரும் மாடத் திருக்கோவலூரதனுள் *
காரார் கருமுகிலைக் காணப்புக்கு * -
ஓராத் திருக்கண்டேனென்றுரைத்த சீரான் கழலே *
உரைக் கண்டாய் நெஞ்சே! உகந்து

cīrārum māṭat tirukkovalūrataṉul̤ *
kārār karumukilaik kāṇappukku *
orāt tirukkaṇṭeṉĕṉṟuraitta cīrāṉ kaḻale *
uraik kaṇṭāy nĕñce! ukantu
குருகை காவலப்பன் / kurukai kāvalappaṉ

Word by word meaning

நெஞ்சே! என் மனமே!; சீராரும் மாட அழகிய மாடங்களை உடைய; திருக்கோவலூர் திருக்கோவல் என்னும் ஊரில்; அதனுள் ஓர் இடைக்கழியில்; காரார் கார்காலத்து; கருமுகிலை கருத்த மேகம் போன்ற எம்பெர்மானை; காணப்புக்கு வணங்கப் புகுந்து; ஓரா மனத்தினுள்ளே அனுபவித்து; திருக் கண்டேன் திருக் கண்டேன்; என்று என்று நூறு பாசுரங்களை; உரைத்த அருளிச்செய்த பேயாழ்வாரின்; சீரான் கழலே சீர்மையுடைய திருவடிகளை; உரைக் கண்டாய் உகந்து மகிழ்ந்து வணங்குவாயாக

நான்முகன் திருவந்தாதி தனியன்கள் / Nānmuhan Thiruvandāthi taṉiyaṉkal̤

நாராயணன் படைத்தான் நான்முகனை *
நான்முகனுக்கு ஏரார் சிவன் பிறந்தானென்னுஞ் சொல் -
சீரார் மொழி செப்பி வாழலாம் நெஞ்சமே! *
மொய்பூ மழிசைப் பரனடியே வாழ்த்து

nārāyaṇaṉ paṭaittāṉ nāṉmukaṉai *
nāṉmukaṉukku erār civaṉ piṟantāṉĕṉṉuñ cŏl -
cīrār mŏḻi cĕppi vāḻalām nĕñcame! *
mŏypū maḻicaip paraṉaṭiye vāḻttu
சீராமப்பிள்ளை / cīrāmappil̤l̤ai

Word by word meaning

வாழ்த்து வாழ்த்தி வணங்குவாயாக; நாராயணன் நாராயணன்; நான்முகனை நான்கு முகங்களை உடைய பிரமனை; படைத்தான் படைத்தான்; நான்முகனுக்கு அப்பிரமனுக்கு; ஏரார் சிவன் அநுஷ்டானத்தில் சிறந்த சிவன்; பிறந்தான் பிறந்தான்; என்னும் சொல் என்று தெரிவிக்கும் பாசுரம் முதலில் உள்ள; சீரார் பெருமை பொருந்திய; மொழி செப்பி இப்பிரபந்தத்தை அனுஸந்தித்து; வாழலாம் நெஞ்சமே! வாழலாம் நெஞ்சமே!; மொய்பூ மலர்கள் நிறைந்த; மழிசை திருமழிசையிலவதரித்த; பரன் பக்திஸார முனிவருடைய; அடியே திருவடிகளை

திருவிருத்தம் தனியன்கள் / Thiruvirutham taṉiyaṉkal̤

கரு விருத்தக்குழி நீத்த பின் காமக் கடுங்குழி வீழ்ந்து *
ஒருவிருத்தம் புக்குழலுறுவீர்! உயிரின் பொருள்கட்கு *
ஒருவிருத்தம் புகுதாமல் குருகையர்கோனுரைத்த *
திருவிருத்தத் தோரடி கற்று இரீர் திருநாட்டகத்தே

karu viruttakkuḻi nītta piṉ kāmak kaṭuṅkuḻi vīḻntu *
ŏruviruttam pukkuḻaluṟuvīr! uyiriṉ pŏrul̤kaṭku *
ŏruviruttam pukutāmal kurukaiyarkoṉuraitta *
tiruviruttat toraṭi kaṟṟu irīr tirunāṭṭakatte
கிடாம்பியாச்சான் / kiṭāmpiyāccāṉ

Word by word meaning

கருவிருத்த குழி கர்ப்பக் குழியிலிருந்து; நீத்த பின் வெளி வந்த பின்; காமக் கடுங்குழி காமம் என்னும் குழியில்; வீழ்ந்து வீழ்ந்து, எதற்கும் உபயோகமில்லாத; ஒரு விருத்தம் கிழத்தனத்தை; புக்கு அடைந்து; உழல் உறுவீர்! அலையும் உலகத்தவர்களே!; உயிரின் ஜீவாத்மாவகிற; பொருள்கட்கு பொருள்களுக்கு; ஒரு விருத்தம் இடயூறு சிறிதும்; புகுதாமல் நேராதபடி; குருகையர் திருக்குருகூரில் அவதரித்த; கோன் நம்மாழ்வார்; உரைத்த அருளிச்செய்த; திருவிருத்தத்து திருவிருத்தத்தின்; ஓர் அடி கற்று ஒரு அடியைக் கற்று; திருநாடகத்தே பரமபதத்தை; இரீர் அடைவீர்களாக

திருவாசிரியம் தனியன்கள் / Thiruvāsiriyam taṉiyaṉkal̤

காசினியோர் தாம் வாழக் கலியுகத்தே வந்துதித்து *
ஆசிரியப் பாவதனால் அருமறை நூல் விரித்தானை *
தேசிகனைப் பராங்குசனைத் திகழ் வகுளத் தாரானை *
மாசடையா மனத்து வைத்து மறவாமல் வாழ்த்துதுமே

kāciṉiyor tām vāḻak kaliyukatte vantutittu *
āciriyap pāvataṉāl arumaṟai nūl virittāṉai *
tecikaṉaip parāṅkucaṉait tikaḻ vakul̤at tārāṉai *
mācaṭaiyā maṉattu vaittu maṟavāmal vāḻttutume
அருளாளப்பெருமாள் எம்பெருமானார் / arul̤āl̤appĕrumāl̤ ĕmpĕrumāṉār

Word by word meaning

காசினியோர்தாம் இவ்வுலகத்திலுள்ளோர்; வாழ உய்யும் பொருட்டு; கலியுகத்தே பரமபதத்திலிருந்து கலியுகத்தில்; வந்து உதித்து வந்து அவதரித்த; ஆசிரியப் பா திருவாசிரியம் என்னும்; அதனால் பாசுர்ங்களால்; அரு மறை நூல் சிறந்த வேதமாகிற சாஸ்திரத்தை; விரித்தானை அருளிச்செய்தவரும்; தேசிகனை எல்லோருக்கும் ஆசிரியரும்; திகழ் வகுள மகிழம்பூ மாலை; தாரானை அணிந்தவருமான; பராங்குசனை நம்மாழ்வாரை; மாசடையா குற்றமற்ற; மனத்து வைத்து மனத்தில் வீற்றிருக்க வைத்து; மறவாமல் மறவாமல்; வாழ்த்துதுமே! வாழ்த்திடுவாய்

பெரியதிருவந்தாதி தனியன்கள் / Periya Thiruvandāthi taṉiyaṉkal̤

முந்துற்ற நெஞ்சே! முயற்றி தரித்துரைத்து *
வந்தித்து வாயார வாழ்த்தியே * - சந்த
முருகூருஞ்சோலசூழ் மொய் பூம் பொருநல் *
குருகூரன் மாறன் பேர் கூறு

muntuṟṟa nĕñce! muyaṟṟi taritturaittu *
vantittu vāyāra vāḻttiye * - canta
murukūruñcolacūḻ mŏy pūm pŏrunal *
kurukūraṉ māṟaṉ per kūṟu
எம்பெருமானார் / ĕmpĕrumāṉār

Word by word meaning

தரித்து உற்சாகத்துடன்; முந்துற்ற நல்ல விஷயங்களை நாடும்; நெஞ்சே! மனமே! நான் உனக்கு இப்போது; முயற்றி கூறப்போகும் விஷயத்தை; உரைத்து என் நிலையை ஆழ்வாரிடம் தெரிவித்து; வந்தித்து வணங்கி; வாயார வாழ்த்தியே வாயார வாழ்த்தி; சந்த முருகூரும் தேன் பெருகும் சந்தன; சோலச் சூழ் சோலைகள் சூழ்ந்த; மொய்பூம் அழகிய பூக்கள் நிறைந்த; பொருநல் தாமிரபரணி நதியை உடைய; குருகூதன் திருக்குருகூரில் அவதரித்த; மாறன் பேர் நம்மாழ்வாரின் நாமத்தை; கூறு நீ கூறி தியானிப்பாயாக

திருவெழுகூற்றிருக்கை தனியன்கள் / Thiruvezukuṛṛirukkai taṉiyaṉkal̤

வாழி பரகாலன் வாழி கலி கன்றி *
வாழி குறையலூர் வாழ் வேந்தன் * - வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரங்கொள் மங்கையர் கோன் *
தூயோன் சுடர்மான வேல்

vāḻi parakālaṉ vāḻi kali kaṉṟi *
vāḻi kuṟaiyalūr vāḻ ventaṉ * - vāḻiyaro
māyoṉai vāl̤ valiyāl mantiraṅkŏl̤ maṅkaiyar koṉ *
tūyoṉ cuṭarmāṉa vel
எம்பெருமானார் / ĕmpĕrumāṉār

Word by word meaning

பரகாலன் புற மதத்தினருக்கு யமன் போன்ற; வாழி திருமங்கை ஆழ்வார் வாழ்க; கலிகன்றி கலியைக் கெடுத்த; வாழி திருமங்கை ஆழ்வார் வாழ்க; குறையலூர் வாழி குறையலூர் வாழும்படி; வாழ்வேந்தன் அதன் அரசனான; வாழியரோ திருமங்கை ஆழ்வார் வாழ்க; மாயோனை எம்பெருமானிடத்திலிருந்து; வாள்வலியால் தமது வாளின் வலிமையால்; மந்திரங்கொள் திருமந்திரத்தைப் பெற்றவரும்; தூயோன் அகப்புறத் தூய்மை உடையவருமான; மங்கையர்கோன் திருமங்கை ஆழ்வாரின்; சுடர்மான ஒளிமயமான பெருமையை உடைய; வேல்! வாழி வேல் வாழ்க

திருவெழுகூற்றிருக்கை தனியன்கள் / Thiruvezukuṛṛirukkai taṉiyaṉkal̤

சீரார் திருவெழுகூற்றிருக்கை யென்னுஞ் செந்தமிழால் *
ஆராவமுதன் குடந்தைப் பிரான் தனடியிணைக்கீழ் *
ஏரார் மறைப் பொருளெல்லா மெடுத்திவ்வுல குய்யவே *
சேராமற் சொன்ன அருண் மாரி பாதம் துணை நமக்கே

cīrār tiruvĕḻukūṟṟirukkai yĕṉṉuñ cĕntamiḻāl *
ārāvamutaṉ kuṭantaip pirāṉ taṉaṭiyiṇaikkīḻ *
erār maṟaip pŏrul̤ĕllā mĕṭuttivvula kuyyave *
cerāmaṟ cŏṉṉa aruṇ māri pātam tuṇai namakke
எம்பெருமானார் / ĕmpĕrumāṉār

Word by word meaning

சீரார் சிறந்த; திருவெழு கூற்றிருக்கை திருவெழு கூற்றிருக்கை; என்னும் என்னும்; செந்தமிழால் செந்தமிழ் நூலால்; ஆராவமுதன் ஆராவமுதன் என்னும்; குடந்தைப் பிரான் திருக்குடந்தைப் பெருமானுடைய; தன் அடியிணைக்கீழ் திருவடிகளைப் பற்றி; ஏரார் மறை வேதப் பொருள்களுடன்; பொருளெல்லாம்எல்லாம் பல அர்த்தங்களை; எடுத்து விளங்க வைத்து; இவ்வுலகு இவ்வுலகம்; உய்யவே உய்வு பெற; அருள்மாரி அருள் மழைபோன்ற உபதேசங்களை; சோராமற் சொன்ன ஒன்றுவிடாமல் கூறிய; பாதம் திருமங்கை ஆழ்வாருடைய திருவடிகளே; துணை நமக்கே நமக்குத் துணை ஆகும்

சிறியதிருமடல் தனியன்கள் / Siriya Thirumaḍal taṉiyaṉkal̤

முள்ளிச் செழுமலரோ தாரான் முளை மதியம் *
கொல்லிக் கென்னுள்ளங் கொதியாமே *- வள்ளல்
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி *
மருவாளன் தந்தான் மடல்

mul̤l̤ic cĕḻumalaro tārāṉ mul̤ai matiyam *
kŏllik kĕṉṉul̤l̤aṅ kŏtiyāme *- val̤l̤al
tiruvāl̤aṉ cīrkkaliyaṉ kārkkaliyai vĕṭṭi *
maruvāl̤aṉ tantāṉ maṭal
பிள்ளை திருநறையூர் அறையர் / pil̤l̤ai tirunaṟaiyūr aṟaiyar

Word by word meaning

செழு முள்ளி செழிப்பான முள்ளி; மலரோ மலர்களாலான ஒப்பற்ற; தாரான் மாலை அணிந்து கொண்டிருப்பவரும்; வள்ளல் பல பிரபந்தங்களை அருளிய வள்ளலும்; திருவாளன் மிகுந்த பக்தி உடையவரும்; மருவாளன் சிறந்த வாளை உடையவரும்; சீர்கலியன் திருமங்கை ஆழ்வார்; முளைமதியம் உதிக்கும் சந்திரனைப் பார்த்து; கொள்ளிக்கு விரஹ தாபம் அடைந்தவர், நெருப்போ; என் உள்ளம் என்று மனம்; கொதியாமே வருந்த வேண்டாதபடி; மடல் சிறிய திருமடல் என்னும் பிரபந்தத்தை; தந்தான் அருளிச்செய்தார்; கார்கலியை வெட்டி அஞ்ஞானத்தை ஒழித்தவருமான

பெரியதிருமடல் தனியன்கள் / Periya Thirumaḍal taṉiyaṉkal̤

பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றி செய்யும் *
நன்னுதலீர்! நம்பி நறையூரர் * - மன்னுலகில்
என்னிலைமை கண்டும் இரங்காரே யாமாகில் *
மன்னு மடலூர் வன் வந்து

pŏṉṉulakil vāṉavarum pūmakal̤um poṟṟi cĕyyum *
naṉṉutalīr! nampi naṟaiyūrar * - maṉṉulakil
ĕṉṉilaimai kaṇṭum iraṅkāre yāmākil *
maṉṉu maṭalūr vaṉ vantu
பிள்ளை திருநறையூர் அறையர் / pil̤l̤ai tirunaṟaiyūr aṟaiyar

Word by word meaning

மன்னு தினமும்; நல் நுதலீர்! அழகிய நெற்றியை உடைய மாதர்களே!; பொன்னுலகில் பரமபதத்தில்; வானவரும் நித்யஸூரிகளாலும்; பூமகளும் திருமகளாலும்; போற்றிச் செய்யும் வணங்கப் பெற்ற; நறையூரர் திருநறை ஊரில் இருப்பவரும்; நம்பி கல்யாண குணங்களை உடையவருமான; மன் உலகில் பெருமான் இந்த பூமியில்; என்னிலைமை என்னுடைய இந்த துயறத்தை; கண்டும் கண்ட பின்பும்; இறங்காரே ஆம் ஆகில் கிருபை செய்யாவிடில்; வந்து அனைத்து ஊர்களிலும் வந்து; மடலூர்வன் மடல் ஊர்ந்துகொண்டே இருப்பேன்

திருவாய்மொழி தனியன்கள் / Thiruvāymozhi taṉiyaṉkal̤

பக்தாம்ருதம் விஸ்வ ஜநாநு மோதநம் *
ஸர்வார்த்த தம் ஸ்ரீசடகோப வாங்க் மயம் *
ஸஹஸ்ர ஸாகோப நிஷத் ஸமாகமம் *
நமாம் யஹம் த்ராவிட வேத ஸாகரம்

paktāmrutam visva janānu motanam *
sarvārtta tam śrīcaṭakopa vāṅk mayam *
sahasra sākopa niṣat samākamam *
namām yaham trāviṭa veta sākaram
நாதமுனிகள் / nātamuṉikal̤

Word by word meaning

भक्तामृतं தொண்டர்களுக்கு அமுதம் போன்றதும்; विश्वजन அனைத்து மக்களுக்கும்; अनुमोदनं தொடர்ந்து ஆனந்தத்தை அளிப்பதும்; सर्वार्थदं எல்லாவித செல்வங்களையும் அளிக்க வல்லதும்; सहस्रशाक ஆயிரக்கணக்கான கிளைகளை உடைய; उपनिषत्समागमं உபனிஷ்தங்களுக்கு சாமமானதும்; श्रीशठकोप நம்மாழ்வாரின்; वांग्मयम् திருவாய்மொழியான; द्राविडवेदसागरम् தமிழ் வேதக் கடலை அளித்த; अहं नमामि நம்மாழ்வாரை நான் வணங்குகிறேன்

திருவாய்மொழி தனியன்கள் / Thiruvāymozhi taṉiyaṉkal̤

திருவழுதி நாடென்றும் தென்குருகூரென்றும் *
மருவினிய வண் பொருநலென்றும் *
அருமறைகள் அந்தாதி செய்தானடியிணையே எப்பொழுதும் *
சிந்தியாய் நெஞ்சே! தெளிந்து

tiruvaḻuti nāṭĕṉṟum tĕṉkurukūrĕṉṟum *
maruviṉiya vaṇ pŏrunalĕṉṟum *
arumaṟaikal̤ antāti cĕytāṉaṭiyiṇaiye ĕppŏḻutum *
cintiyāy nĕñce! tĕl̤intu
ஈச்வரமுனிகள் / īcvaramuṉikal̤

Word by word meaning

நெஞ்சே! மனமே!; திருவழுதி நாடென்றும் திருவழுதி நாடு என்றும்; தென் குருகூர் என்றும் தென் குருகூர் என்றும்; மருவினிய விரும்பியபடி அழகிய இனிய; வண்பொரு தாமிரபரணி என்ற; நல் என்றும் நல்ல ஆற்றை உடையது என்றும்; அருமறைகள் அருமையான வேதங்களை; அந்தாதி அந்தாதி இலக்கண்ப்படி; செய்தான் அருளிச்செய்த ஆழ்வாரின்; அடியிணையே திருவடிகளையே; எப்பொழுதும் எப்பொழுதும்; சிந்தியாய் தெளிந்து தெளிந்து சிந்தித்து வணங்குவாயாக

திருவாய்மொழி தனியன்கள் / Thiruvāymozhi taṉiyaṉkal̤

மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும்
இனத்தாரையல்லா திறைஞ்சேன் *
தனத்தாலும் ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன் *
பாதங்கள் யாமுடைய பற்று

maṉattālum vāyālum vaṇ kurukūr peṇum
iṉattāraiyallā tiṟaiñceṉ *
taṉattālum etuṅ kuṟaivileṉ ĕntai caṭakopaṉ *
pātaṅkal̤ yāmuṭaiya paṟṟu
சொட்டைநம்பிகள் / cŏṭṭainampikal̤

Word by word meaning

குறைவிலேன் குறையும் எனக்கு இல்லை; மனத்தாலும் மனதினாலும்; வாயாலும் வாக்கினாலும், சரீரத்தாலும்; பேணும் வைத்த மாநிதி என்று பணியவும்; வண்குருகூர் சிறந்த திருகுருகூரை; இனத்தாரை சேர்ந்தவர்களைத் தவிர; அல்லாது மற்றவர்களை; இரைஞ்சேன் வணங்கமாட்டேன்; எந்தை எங்கள் ஸ்வாமியான; சடகோபன் நம்மாழ்வாருடைய; பாதங்கள் திருவடிகளை; யாமுடைய பற்று பற்றுவதினால்; தனத்தாலும் செல்வத்தினாலும்; ஏதும் எந்தவித

திருவாய்மொழி தனியன்கள் / Thiruvāymozhi taṉiyaṉkal̤

ஏய்ந்த பெருங் கீர்த்தி யிராமானுச முனி தன் *
வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன் * -
ஆய்ந்த பெருஞ்ச் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் *
பேராதவுள்ளம் பெற

eynta pĕruṅ kīrtti yirāmāṉuca muṉi taṉ *
vāynta malarp pātam vaṇaṅkukiṉṟeṉ * -
āynta pĕruñc cīrār caṭakopaṉ cĕntamiḻ vetam tarikkum *
perātavul̤l̤am pĕṟa
அனந்தாழ்வான் / aṉantāḻvāṉ

Word by word meaning

ஆய்ந்த பெரும் குற்றமற்ற நற்குணங்களினால்; சீரார் சிறப்பு மிகுந்த; சடகோபன் நம்மாழ்வார் அருளிச்செய்த; செந்தமிழ் வேதம் செந்தமிழ் திராவிட வேதத்தை; தரிக்கும் மனதில் கொள்ள வல்லமை பெற்றிட; பேராத அதைத் தவிர வேறு ஒன்றையும் நினைக்காத; உள்ளம் பெற மனம், பெறும் பொருட்டு; ஏய்ந்த பெரும் கீர்த்தி பெரும் புகழை உடைய; இராமானுச முனிதன் இராமானுசரின்; வாய்ந்த மலர்ப்பாதம் திருவடித்தாமரைகளை; வணங்குகின்றேன் வணங்குகின்றேன்

திருவாய்மொழி தனியன்கள் / Thiruvāymozhi taṉiyaṉkal̤

வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல் *
ஆன்ற தமிழ் மறைகளாயிரமும் *
ஈன்ற முதல் தாய் சடகோபன் * மொய்ம் பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்

vāṉ tikaḻum colai matil̤araṅkar vaṇpukaḻ mel *
āṉṟa tamiḻ maṟaikal̤āyiramum *
īṉṟa mutal tāy caṭakopaṉ * mŏym pāl val̤artta
itattāy irāmuṉucaṉ
பட்டர் / paṭṭar

Word by word meaning

வான் திகழும் ஆகாசத்தளவு ஓங்கி வளர்ந்த; சோலை சோலைகளையும்; மதிள் மதிள்களையும் உடைய; அரங்கர் ஸ்ரீரங்கத்தில் சயனித்திருக்கும் பெருமானின்; வண்புகழ் கல்யாண குணங்களை; மேல் ஆன்ற பற்றி அமைந்த; தமிழ் மறைகள் தமிழ் வேதமான, திருவாய்மொழி; ஆயிரமும் ஆயிரம் பாசுரங்களையும்; ஈன்ற முதல் தாய் பெற்றெடுத்த தாயார்; சடகோபன் நம்மாழ்வார் ஆவார்; மொய்ம்பால் மிடுக்குடனே; வளர்த்த அதை போஷித்து வளர்த்து; இதத்தாய் அருளின தாயார்; ராமானுசன் இராமானுசன் ஆவார்

திருவாய்மொழி தனியன்கள் / Thiruvāymozhi taṉiyaṉkal̤

மிக்க விறை நிலையும் மெய்யாமுயிர் நிலையும் *
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும் *
ஊழ் வினையும் வாழ் வினையும் ஓதும் குருகையர் கோன் *
யாழினிசை வேதத் தியல்

mikka viṟai nilaiyum mĕyyāmuyir nilaiyum *
takka nĕṟiyum taṭaiyākit - tŏkkiyalum *
ūḻ viṉaiyum vāḻ viṉaiyum otum kurukaiyar koṉ *
yāḻiṉicai vetat tiyal
பட்டர் / paṭṭar

Word by word meaning

குருகையர் திருக்குருகூரிலுள்ள; கோன் ஆழ்வார் அருளிச்செய்த; யாழ் இசை யாழினும் இனிய இசை போன்ற; வேதத்து இயல் திருவாய்மொழிப் பாசுரங்கள்; மிக்க இறை எம்பெருமானின்; நிலையும் இயல்பையும்; மெய்யாம் ஜீவாத்மாவின்; உயிர் நிலையும் இயல்பையும்; தக்க ஜீவாத்மா அவனை அடையும்; நெறியும் உபாயத்தையும்; தடையாகி அவனை அடைய தடையாக இருக்கும்; ஊழ்வினையும் முன் வினைகளாகிற; தொக்கு இயலும் விரோதிகளைப் பற்றியும்; வாழ்வினையும் வாழ்வாகிற மோக்ஷத்தைப் பற்றியும்; ஓதும் உபதேசிக்கின்றது

இராமானுச நூற்றந்தாதி தனியங்கள் / Rāmānuja Nutrandāthi taṉiyaṉkal̤

முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும், - என்னுடைய
சென்னிக் கணியாகச் சேர்த்தினேன், தென்புலத்தார்க்
கென்னுக் கடவுடையேன் யான்

muṉṉai viṉaiyakala mūṅkiṟ kuṭiyamutaṉ
pŏṉṉaṅ kaḻaṟkamalap potiraṇṭum, - ĕṉṉuṭaiya
cĕṉṉik kaṇiyākac certtiṉeṉ, tĕṉpulattārk
kĕṉṉuk kaṭavuṭaiyeṉ yāṉ
வேதப்பிரான் பட்டர் / vetappirāṉ paṭṭar

Word by word meaning

முன்னை வினை முன் செய்த பாபங்கள்; அகல தொலைய; மூங்கிற்குடி மூங்கிற்குடி என்னும் குலத்தில்; அமுதன் தோன்றிய திருவரங்கத்தமுதனாரின்; பொன்னான் பொன் போன்றதுவும்; கமலப் போது தாமரை போன்றதுமான; கழல் இரண்டும் திருவடிகள் இரண்டும்; என்னுடைய சென்னிக்கு என்னுடைய தலைக்கு; அணியாக ஆபரணமாக; சேர்த்தினன் பொருந்த வைத்துக் கொண்டேன்; யான் இப்படி அமுதனாரின் திருவடிகளைச் சூடபெற்ற நான்; தென்புலத்தார்க்கு யம கிங்கரர்கள்; என்னுக்கு என் அருகே வருவதற்கு; கடவுடையேன் எந்தக் காரணமும் இல்லை

இராமானுச நூற்றந்தாதி தனியங்கள் / Rāmānuja Nutrandāthi taṉiyaṉkal̤

நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்
சயந்தரு கீர்த்தி இராமானுச முனி தாளிணை மேல்,
உயர்ந்த குணத்துத் திருவரங்கத் தமுது, ஓங்கும் அன்பால்
இயம்பும், கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே!

nayantaru periṉpa mĕllām paḻutĕṉṟu naṇṇiṉarpāl
cayantaru kīrtti irāmāṉuca muṉi tāl̤iṇai mel,
uyarnta kuṇattut tiruvaraṅkat tamutu, oṅkum aṉpāl
iyampum, kalittuṟai antāti ota icai nĕñcame!
வேதப்பிரான் பட்டர் / vetappirāṉ paṭṭar

Word by word meaning

திருவரங்கத்து அமுது திருவரங்கத்தமுதனார்; நெஞ்சமே! ஓ மனமே!; நயம் தரு விஷயங்களால் உண்டாகும்; பேரின்பம் எல்லாம் சிற்றின்பங்கள் யாவும்; பழுது என்று வீணானது என்று அவைகளை ஒழித்து; நண்ணினர்பால் பெருமானைப் பணிந்தவர்களுக்கு; சயம் தரு கீர்த்தி வெற்றி என்னும் மோக்ஷம் உண்டாக்கும்; இராமாநுசமுனி இராமானுஜருடைய; தாள் இணைமேல் திருவடிகளைக்குறித்து; உயர்ந்த குணத்து சிறந்த குணசாலியான; ஓங்கும் அன்பால் தம் சிறந்த பக்தியால்; இயம்பும் அருளிச்செய்த; கலித்துறை கட்டளைக் கலித்துறையால் ஆன

இராமானுச நூற்றந்தாதி தனியங்கள் / Rāmānuja Nutrandāthi taṉiyaṉkal̤

சொல்லின் தொகை கொண்டுனதடிப் போதுக்குத் தொண்டு செய்யும்,
நல்லன்பர் ஏத்தமுன் நாமமெல்லாமென்றன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும் படி நல்கு அறுசமயம்
வெல்லும் பரம, இராமானுச! இதென் விண்ணப்பமே

cŏlliṉ tŏkai kŏṇṭuṉataṭip potukkut tŏṇṭu cĕyyum,
nallaṉpar ettamuṉ nāmamĕllāmĕṉṟaṉ nāviṉul̤l̤e
allum pakalum amarum paṭi nalku aṟucamayam
vĕllum parama, irāmāṉuca! itĕṉ viṇṇappame
வேதப்பிரான் பட்டர் / vetappirāṉ paṭṭar

Word by word meaning

அந்தாதி ஓத இசை நூற்றந்தாதியை நீ அநுஸந்திப்பாயாக; அறுசமயம் ஆறுமதங்களையும்; வெல்லும் பரம கண்டித்தருளின; இராமாநுச! இராமாநுஜரே!; உனதடிப் போதுக்கு உங்கள் திருவடிகளிலே; தொண்டு செய்யும் தொண்டு செய்யும்; நல்அன்பர் பரம பக்தர்கள்; சொல்லின் தொகை சொல், தொகை, தொடைகளாலான; கொண்டு ஏத்தும் இப்பாசுரங்களைத் கொண்டு துதிக்கும்; உன் நாமம் எல்லாம் தங்கள் திருநாமங்களெல்லாம்; என்றன் நாவினுள்ளே என்தன் நாவினுள்ளே; அல்லும் பகலும் எப்பொழுதும்; அமரும்படி பொருந்தியிருக்கும்படி; நல்கு அருளவேண்டும்; இது என் விண்ணப்பமே இதுவே என் விண்ணப்பம்

திருவாய்மொழி நூற்றந்தாதி தனியன்கள் / Thiruvāymozhi Nutrandāthi taṉiyaṉkal̤

அல்லும் பகலும் அனுபவிப்பார் தங்களுக்குச்,
சொல்லும் பொருளும் தொகுத்து உரைத்தான்,-நல்ல
மணவாள மாமுனிவன் மாறன் மறைக்குத்,
தணவா நூற்றந்தாதி தான்

allum pakalum aṉupavippār taṅkal̤ukkuc,
cŏllum pŏrul̤um tŏkuttu uraittāṉ,-nalla
maṇavāl̤a māmuṉivaṉ māṟaṉ maṟaikkut,
taṇavā nūṟṟantāti tāṉ
மணவாள மாமுனிகள் / maṇavāl̤a māmuṉikal̤

Word by word meaning

அல்லும் பகலும் இரவும் பகலும் எப்பொழுதும்; அனுபவிப்பார் நெஞ்சு இருள் இரும்படி அனுபவிக்க; தங்களுக்கு விரும்புபவர்களுக்காக; சொல்லும் இனிமையான சொற்களையும்; பொருளும் பொருளையும்; தொகுத்து தொகுத்து; உரைத்தான் உரைத்தான்; நல்ல நனமையை விரும்பிய; மணவாள மா முனிவன் மணவாள மா முனிகள்; மாறன் நம்மாழ்வார் அருளிச்செய்த; மறைக்கு வேதமான திருவாய்மொழிக்கு; தணவா மிகவும் பொருந்திய; நூற்றந்தாதி தான் நூற்றந்தாதியை ஸங்கிரகமாக அருளிச்செய்தார்

திருவாய்மொழி நூற்றந்தாதி தனியன்கள் / Thiruvāymozhi Nutrandāthi taṉiyaṉkal̤

மன்னு புகழ்சேர் மணவாள மாமுனிவன்,
தன்னருளால் உட்பொருள்கள் தம்முடனே-சொன்ன,
திருவாய் மொழி நூற்றந்தாதியாம் தேனை,
ஒருவா தருந்து நெஞ்சே! உற்று
மணவாள மாமுனிகள் / maṇavāl̤a māmuṉikal̤

Word by word meaning

நெஞ்சே! நெஞ்சே!; மன்னு நிலை பெற்ற; புகழ்சேர் புகழை உடையவரான; மணவாள மா முனிவன் மணவாள மா முனிவன்; தன்னருளால் தன் அருளால்; உட்பொருள்கள் ஆழ்ந்த கருத்துக்கள்; தன்னுடனே அமையும்படி; சொன்ன அருளிச்செய்த; திருவாய்மொழி திருவாய்மொழி; நூற்றந்தாதியாம் நூற்றந்தாதி; தேனை தேனை; ஒருவாது இடைவிடாமல்; உற்று அருந்து ஊன்றி பருக்கடவாய்; தேனை தேனை; ஒருவாது இடைவிடாமல்; உற்று அருந்து ஊன்றி பருக்கடவாய்