Chapter 5

The great joy attained by Āzhvār through union with Emperumān - (அம் தாமத்து)

இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்

These divine hymns enumerate the joy-filled experience of Āzhvār when Bhagavān decides to put a stop to Āzhvār’s separation anxiety and despair by reuniting with him.


Insights from the Avatārikā of Tirukkurukaippirāṉ Piḷḷāṉ Insights from the Avatārikā of Nañjīyar

In the fifth chapter, our Ācāryas draw a profound parallel between the

+ Read more

ஆழ்வார் படும் வருத்தம் தீருமாறு பகவான் வந்து ஆழ்வாரோடு கலந்ததை மகிழ்ந்து பேசும் பாடல்கள் இவை.

இரண்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி அந்தாமத்தன்பு’-பிரவேசம்

கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஷதே ஜலே ஸ்ரீ கஜேந்திரன் என்னும் யானையானது, கரையில் இழுக்கிறது; முதலையானது, தண்ணீருக்குள் இழுக்கிறது,’என்றதனைப்

+ Read more
Verses: 2945 to 2955
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Pan: சீகாமரம்
Timing: 9.00-10.30 PM
Recital benefits: will reach Vaikuntam
  • TVM 2.5.1
    2945 ## அம் தாமத்து அன்பு செய்து * என் ஆவி சேர் அம்மானுக்கு *
    அம் தாமம் வாழ் முடி சங்கு * ஆழி நூல் ஆரம் உள **
    செந்தாமரைத்தடம் கண் * செங்கனி வாய் செங்கமலம் *
    செந்தாமரை அடிகள் * செம்பொன் திரு உடம்பே (1)
  • TVM 2.5.2
    2946 திரு உடம்பு வான் சுடர் * செந்தாமரை கண் கை கமலம் *
    திரு இடமே மார்பம் * அயன் இடமே கொப்பூழ் **
    ஒருவு இடமும் * எந்தை பெருமாற்கு அரனே ஓ *
    ஒருவு இடம் ஒன்று இன்றி * என்னுள் கலந்தானுக்கே (2)
  • TVM 2.5.3
    2947 என்னுள் கலந்தவன் * செங்கனி வாய் செங்கமலம் *
    மின்னும் சுடர் மலைக்கு * கண் பாதம் கை கமலம் **
    மன்னும் முழு ஏழ் உலகும் * வயிற்றின் உள *
    தன்னுள் கலவாதது * எப் பொருளும் தான் இலையே (3)
  • TVM 2.5.4
    2948 எப் பொருளும் தான் ஆய் * மரதகக் குன்றம் ஒக்கும் *
    அப்பொழுதைத் தாமரைப்பூக் * கண் பாதம் கை கமலம் **
    எப்பொழுதும் நாள் திங்கள் * ஆண்டு ஊழி ஊழிதொறும் *
    அப்பொழுதைக்கு அப்பொழுது * என் ஆரா அமுதமே (4)
  • TVM 2.5.5
    2949 ஆரா அமுதமாய் * அல் ஆவியுள் கலந்த *
    கார் ஆர் கருமுகில் போல் * என் அம்மான் கண்ணனுக்கு **
    நேரா வாய் செம்பவளம் * கண் பாதம் கை கமலம் *
    பேர் ஆரம் நீள் முடி நாண் * பின்னும் இழை பலவே (5)
  • TVM 2.5.6
    2950 பலபலவே ஆபரணம் * பேரும் பலபலவே *
    பலபலவே சோதி * வடிவு பண்பு எண்ணில் **
    பலபல கண்டு உண்டு * கேட்டு உற்று மோந்து இன்பம் *
    பலபலவே ஞானமும் * பாம்பு அணை மேலாற்கேயோ (6)
  • TVM 2.5.7
    2951 பாம்பு அணைமேல் பாற்கடலுள் * பள்ளி அமர்ந்ததுவும் *
    காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய் * ஏறு உடன் ஏழ் செற்றதுவும் **
    தேம் பணைய சோலை * மராமரம் ஏழ் எய்ததுவும் *
    பூம் பிணைய தண் துழாய்ப் * பொன் முடி அம் போர் ஏறே (7)
  • TVM 2.5.8
    2952 பொன் முடி அம் போர் * ஏற்றை எம்மானை நால் தடம் தோள் *
    தன் முடிவு ஒன்று இல்லாத * தண் துழாய் மாலையனை **
    என் முடிவு காணாதே * என்னுள் கலந்தானை *
    சொல்முடிவு காணேன் நான் * சொல்லுவது என்? சொல்லீரே (8)
  • TVM 2.5.9
    2953 சொல்லீர் என் அம்மானை * என் ஆவி ஆவிதனை *
    எல்லை இல் சீர் * என் கருமாணிக்கச் சுடரை **
    நல்ல அமுதம் * பெறற்கு அரிய வீடும் ஆய் *
    அல்லி மலர் விரை ஒத்து * ஆண் அல்லன் பெண் அல்லனே (9)
  • TVM 2.5.10
    2954 ஆண் அல்லன் பெண் அல்லன் * அல்லா அலியும் அல்லன் *
    காணலும் ஆகான் * உளன் அல்லன் இல்லை அல்லன் **
    பேணுங்கால் பேணும் * உரு ஆகும் அல்லனும் ஆம் *
    கோணை பெரிது உடைத்து * எம் பெம்மானைக் கூறுதலே (10)
  • TVM 2.5.11
    2955 ## கூறுதல் ஒன்று ஆராக் * குடக் கூத்த அம்மானை *
    கூறுதலே மேவிக் * குருகூர்ச் சடகோபன் **
    கூறின அந்தாதி * ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் *
    கூறுதல் வல்லார் உளரேல் * கூடுவர் வைகுந்தமே (11)