Chapter 1

Thirunaraiyur 8 - (கறவா மட)

திருநறையூர் 8
Thirunaraiyur 8 - (கறவா மட)
The āzhvār beseeches Thirunaraiyur Nambi to remove the great sorrow of worldly existence and bestow His grace upon him. How could the āzhvār ever forget such a merciful Lord?
பிறவிப் பெருந்துயரை நீக்கித் தமக்கு அருள் புரியுமாறு திருநறையூர் நம்பியை ஆழ்வார் ஈண்டு வேண்டுகிறார். அப்பெருமானை ஆழ்வார் எப்படி மறப்பார்?
Verses: 1548 to 1557
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: பழந்தக்கராகம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and be happy with the Gods
  • PT 7.1.1
    1548 ## கறவா மட நாகு * தன் கன்று உள்ளினால் போல் *
    மறவாது அடியேன் * உன்னையே அழைக்கின்றேன் **
    நறவு ஆர் பொழில் சூழ் * நறையூர் நின்ற நம்பி *
    பிறவாமை எனைப் பணி * எந்தை பிரானே 1
  • PT 7.1.2
    1549 வற்றா முதுநீரொடு * மால் வரை ஏழும் *
    துற்று ஆக முன் துற்றிய * தொல் புகழோனே **
    அற்றேன் அடியேன் * உன்னையே அழைக்கின்றேன் *
    பெற்றேன் அருள் தந்திடு * என் எந்தை பிரானே 2
  • PT 7.1.3
    1550 தாரேன் பிறர்க்கு * உன் அருள் என்னிடை வைத்தாய் *
    ஆரேன் அதுவே * பருகிக் களிக்கின்றேன் **
    கார் ஏய் கடலே மலையே * திருக்கோட்டி
    ஊரே * உகந்தாயை * உகந்து அடியேனே 3
  • PT 7.1.4
    1551 புள் வாய் பிளந்த * புனிதா என்று அழைக்க *
    உள்ளே நின்று * என் உள்ளம் குளிரும் ஒருவா! **
    கள்வா! * கடல்மல்லைக் கிடந்த கரும்பே *
    வள்ளால் உன்னை * எங்ஙனம் நான் மறக்கேனே? 4
  • PT 7.1.5
    1552 வில் ஏர் * நுதல் நெடுங் கண்ணியும் நீயும் *
    கல் ஆர் கடுங் கானம் * திரிந்த களிறே *
    நல்லாய் நர நாரணனே! * எங்கள் நம்பி *
    சொல்லாய் உன்னை * யான் வணங்கித் தொழும் ஆறே 5
  • PT 7.1.6
    1553 பனி ஏய் பரங் குன்றின் * பவளத் திரளே *
    முனியே * திருமூழிக்களத்து விளக்கே **
    இனியாய் தொண்டரோம் * பருகும் இன் அமுது ஆய
    கனியே * உன்னைக் கண்டுகொண்டு * உய்ந்தொழிந்தேனே 6
  • PT 7.1.7
    1554 கதியேல் இல்லை * நின் அருள் அல்லது எனக்கு *
    நிதியே! * திருநீர்மலை நித்திலத் தொத்தே *
    பதியே பரவித் தொழும் * தொண்டர் தமக்குக்
    கதியே * உன்னைக் கண்டுகொண்டு * உய்ந்தொழிந்தேனே 7
  • PT 7.1.8
    1555 அத்தா அரியே என்று * உன்னை அழைக்க *
    பித்தா என்று பேசுகின்றார் * பிறர் என்னை **
    முத்தே மணி மாணிக்கமே * முளைக்கின்ற
    வித்தே * உன்னை எங்ஙனம் நான் விடுகேனே 8
  • PT 7.1.9
    1556 தூயாய் சுடர் மா மதிபோல் * உயிர்க்கு எல்லாம் *
    தாய் ஆய் அளிக்கின்ற * தண் தாமரைக் கண்ணா! **
    ஆயா அலை நீர் உலகு ஏழும் * முன் உண்ட
    வாயா * உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே 9
  • PT 7.1.10
    1557 ## வண்டு ஆர் பொழில் சூழ் * நறையூர் நம்பிக்கு * என்றும்
    தொண்டு ஆய் * கலியன் ஒலிசெய் தமிழ் மாலை *
    தொண்டீர் இவை பாடுமின் * பாடி நின்று ஆட *
    உண்டே விசும்பு * உம் தமக்கு இல்லை துயரே 10