Chapter 10

Thirunaraiyur 7 - (கிடந்த நம்பி)

திருநறையூர் 7
Thirunaraiyur 7 - (கிடந்த நம்பி)
In Thirunaraiyur, the āzhvār advises all of us to chant the sacred name "Namo Narayanaya."
நமோ நாராயணம் என்னும் திருப்பெயரையே சொல்லுமாறு திருநறையூரில் ஆழ்வார் நமக்கெல்லாம் அறிவுரை கூறுகிறார்.
Verses: 1538 to 1547
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: இந்தளம்
Recital benefits: Will not get affected by the results of bad karma
  • PT 6.10.1
    1538 ## கிடந்த நம்பி குடந்தை மேவிக் * கேழல் ஆய் உலகை
    இடந்த நம்பி * எங்கள் நம்பி * எறிஞர் அரண் அழிய **
    கடந்த நம்பி கடி ஆர் இலங்கை * உலகை ஈர் அடியால் *
    நடந்த நம்பி நாமம் சொல்லில் * நமோ நாராயணமே 1
  • PT 6.10.2
    1539 விடம் தான் உடைய அரவம் வெருவச் * செருவில் முன நாள் * முன்
    தடந் தாமரை நீர்ப் பொய்கை புக்கு * மிக்க தாள் ஆளன் **
    இடந்தான் வையம் கேழல் ஆகி * உலகை ஈர் அடியால் *
    நடந்தானுடைய நாமம் சொல்லில் * நமோ நாராயணமே 2
  • PT 6.10.3
    1540 பூணாது அனலும் * தறுகண் வேழம் மறுக * வளை மருப்பை
    பேணான் வாங்கி * அமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன் **
    பாணா வண்டு முரலும் கூந்தல் * ஆய்ச்சி தயிர் வெண்ணெய் *
    நாணாது உண்டான் நாமம் சொல்லில் * நமோ நாராயணமே 3
  • PT 6.10.4
    1541 ## கல் ஆர் மதிள் சூழ் * கச்சி நகருள் நச்சிப் * பாடகத்துள்
    எல்லா உலகும் வணங்க * இருந்த அம்மான் ** இலங்கைக்கோன்
    வல் ஆள் ஆகம் * வில்லால் முனிந்த எந்தை * விபீடணற்கு
    நல்லானுடைய நாமம் சொல்லில் * நமோ நாராயணமே 4
  • PT 6.10.5
    1542 குடையா வரையால் * நிரை முன் காத்த பெருமான் * மருவாத
    விடை தான் ஏழும் வென்றான் * கோவல் நின்றான் * தென் இலங்கை
    அடையா அரக்கர் வீயப் * பொருது மேவி வெம் கூற்றம் *
    நடையா உண்ணக் கண்டான் நாமம் * நமோ நாராயணமே 5
  • PT 6.10.6
    1543 கான எண்கும் குரங்கும் * முசுவும் படையா * அடல் அரக்கர்
    மானம் அழித்து நின்ற * வென்றி அம்மான் ** எனக்கு என்றும்
    தேனும் பாலும் அமுதும் ஆய * திருமால் திருநாமம் *
    நானும் சொன்னேன் நமரும் உரைமின் * நமோ நாராயணமே 6
  • PT 6.10.7
    1544 நின்ற வரையும் கிடந்த கடலும் * திசையும் இரு நிலனும் *
    ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி * நின்ற அம்மானார் **
    குன்று குடையா எடுத்த * அடிகளுடைய திருநாமம் *
    நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன் * நமோ நாராயணமே 7
  • PT 6.10.8
    1545 கடுங் கால் மாரி கல்லே பொழிய * அல்லே எமக்கு என்று
    படுங்கால் * நீயே சரண் என்று * ஆயர் அஞ்ச அஞ்சாமுன் **
    நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி * நிரையைச் சிரமத்தால் *
    நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் * நமோ நாராயணமே 8
  • PT 6.10.9
    1546 பொங்கு புணரிக் கடல் சூழ் ஆடை * நில மா மகள் மலர் மா
    மங்கை * பிரமன் சிவன் இந்திரன் * வானவர் நாயகர் ஆய **
    எங்கள் அடிகள் இமையோர் * தலைவருடைய திருநாமம் *
    நங்கள் வினைகள் தவிர உரைமின் * நமோ நாராயணமே 9
  • PT 6.10.10
    1547 ## வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று * நறையூர் நெடுமாலை *
    நாவில் பரவி நெஞ்சில் கொண்டு * நம்பி நாமத்தை *
    காவித் தடங் கண் மடவார் கேள்வன் * கலியன் ஒலி மாலை *
    மேவிச் சொல்ல வல்லார் பாவம் * நில்லா வீயுமே 10