Chapter 1

Thiruvinnagar 1 - (வண்டு உணும்)

திருவிண்ணகர் 1
Thiruvinnagar 1 - (வண்டு உணும்)
This Divya Desam is called Uppiliappan Kovil. It is also known as Thalasivanam. Here, Srinivasan resides. This is a place for offering prayers. The Lord here still accepts food offerings without salt. He is also known by the divine name Oppiliappan. How fitting it is to call Him Oppiliappan, meaning "the incomparable Lord"!
இந்தத் திவ்வியதேசத்தை உப்பிலியப்பன் கோயில் என்று கூறுவார்கள். இதனைத் தளஸீவனம் என்றும் கூறுவர். இங்கு ஸ்ரீநிவாஸன் எழுந்தருளி இருக்கின்றார். இது பிரார்த்தனைத் தலம். இப்பெருமாள் இப்போதும் உப்பு இல்லாமல் தளிகைகளை அமுது செய்கிறார். இப்பெருமானுக்கு ஒப்பிலியப்பன் என்ற திருநாமமும் கூறப்படுகிறது. ஒப்பில்லாத அப்பனை ஒப்பிலியப்பன் என்று அழைப்பது எவ்வளவு பொருத்தமானது!
Verses: 1448 to 1457
Grammar: Vaṉjiviruththam / வஞ்சிவிருத்தம்
Recital benefits: Will reach the feet of the lord Vāmanan
  • PT 6.1.1
    1448 ## வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு *
    பண்டை நம் வினை கெட என்று * அடிமேல்
    தொண்டரும் அமரரும் பணிய நின்று * அங்கு
    அண்டமொடு அகல் இடம் அளந்தவனே **
    ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
    வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 1
  • PT 6.1.2
    1449 அண்ணல் செய்து அலை கடல் கடைந்து * அதனுள்
    கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே *
    விண்ணவர் அமுது உண அமுதில் வரும் *
    பெண் அமுது உண்ட எம் பெருமானே **
    ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
    வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 2
  • PT 6.1.3
    1450 குழல் நிற வண்ண நின்கூறு கொண்ட *
    தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
    விழ * நனி மலை சிலை வளைவு செய்து * அங்கு
    அழல் நிற அம்பு அதுஆனவனே **
    ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
    வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 3
  • PT 6.1.4
    1451 நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும் *
    உலகமும் உயிர்களும் உண்டு ஒருகால் *
    கலை தரு குழவியின் உருவினை ஆய் *
    அலை கடல் ஆல் இலை வளர்ந்தவனே **
    ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
    வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 4
  • PT 6.1.5
    1452 பார் எழு கடல் எழு மலை எழும் ஆய்ச் *
    சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம் *
    ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று * அங்கு
    ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே **
    ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
    வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 5
  • PT 6.1.6
    1453 கார் கெழு கடல்களும் மலைகளும் ஆய் *
    ஏர் கெழும் உலகமும் ஆகி *
    முதலார்களும் அறிவு அரும் நிலையினை ஆய்ச் *
    சீர் கெழு நான்மறை ஆனவனே **
    ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
    வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 6
  • PT 6.1.7
    1454 உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில் *
    இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய் *
    பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும் *
    இருக்கினில் இன் இசை ஆனவனே **
    ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
    வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 7
  • PT 6.1.8
    1455 காதல் செய்து இளையவர் கலவி தரும் *
    வேதனை வினை அது வெருவுதல் ஆம் *
    ஆதலின் உனது அடி அணுகுவன் நான் *
    போது அலர் நெடுமுடிப் புண்ணியனே **
    ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
    வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 8
  • PT 6.1.9
    1456 சாதலும் பிறத்தலும் என்று இவற்றை
    காதல் செய்யாது உன கழல் அடைந்தேன் *
    ஓதல் செய் நான்மறை ஆகி * உம்பர்
    ஆதல் செய் மூவுரு ஆனவனே **
    ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
    வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 9
  • PT 6.1.10
    1457 ## பூ மரு பொழில் அணி * விண்ணகர் மேல் *
    காமரு சீர்க் * கலிகன்றி சொன்ன **
    பா மரு தமிழ் இவை * பாட வல்லார் *
    வாமனன் அடி இணை * மருவுவரே 10