Chapter 5

Thirunāngur Thirumanikkudam - (தூம்பு உடைப்)

திருநாங்கூர்த் திருமணிக்கூடம்
Thirunāngur Thirumanikkudam - (தூம்பு உடைப்)

This village is one of the Thirunangur Divya Desams. It is located half a mile east of Thirunangur. The Lord here is Thirumanikkoodanayagan, and the Goddess is Indira Devi. This Lord is also known as Gajendra Varadhan.


The Āzhvār enters a state of deep contemplation, meditating upon the supreme and multifaceted nature of Sarvēśvaran. He glorifies

+ Read more

இவ்வூர் திருநாங்கூர்த் திருப்பதிகளுள் ஒன்று. திருநாங்கூரிலிருந்து கிழக்கே அரைக்கல் தொலைவில் உள்ளது. பெருமாள் திருமணிக்கூட நாயகன். தாயார் இந்திரா தேவி. இந்த எம் பெருமான் கஜேந்திரவரதன்.

Verses: 1288 to 1297
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will rule the world surrounded by sounding oceans under a white umbrella and become gods
  • PT 4.5.1
    1288 ## தூம்பு உடைப் பனைக் கை வேழம் *
    துயர் கெடுத்தருளி * மன்னும்
    காம்பு உடைக் குன்றம் ஏந்திக் *
    கடு மழை காத்த எந்தை *
    பூம் புனல் பொன்னி முற்றும் **
    புகுந்து பொன் வரன்ட எங்கும் *
    தேம் பொழில் கமழும் நாங்கூர்த் *
    திருமணிக்கூடத்தானே 1
  • PT 4.5.2
    1289 கவ்வை வாள் எயிற்று வன் பேய்க் *
    கதிர் முலை சுவைத்து * இலங்கை
    வவ்விய இடும்பை தீரக் *
    கடுங் கணை துரந்த எந்தை **
    கொவ்வை வாய் மகளிர் கொங்கைக் *
    குங்குமம் கழுவிப் போந்த *
    தெய்வ நீர் கழும் நாங்கூர்த் *
    திருமணிக்கூடத்தானே 2
  • PT 4.5.3
    1290 மாத் தொழில் மடங்கச் செற்று *
    மருது இற நடந்து * வன் தாள்
    சேத் தொழில் சிதைத்துப் * பின்னை
    செவ்வித் தோள் புணர்ந்த எந்தை **
    நாத் தொழில் மறை வல்லார்கள் *
    நயந்து அறம் பயந்த வண் கைத் *
    தீத் தொழில் பயிலும் நாங்கூர்த் *
    திருமணிக்கூடத்தானே 3
  • PT 4.5.4
    1291 தாங்கு அரும் சினத்து வன் தாள் *
    தடக் கை மா மருப்பு வாங்கி *
    பூங் குருந்து ஒசித்து புள் வாய்
    பிளந்து * எருது அடர்த்த எந்தை **
    மாங்கனி நுகர்ந்த மந்தி *
    வந்து வண்டு இரிய * வாழைத்
    தீங் கனி நுகரும் நாங்கூர்த் *
    திருமணிக்கூடத்தானே 4
  • PT 4.5.5
    1292 கரு மகள் இலங்கையாட்டி *
    பிலங் கொள் வாய் திறந்து * தன்மேல்
    வரும் அவள் செவியும் மூக்கும்
    வாளினால் தடிந்த எந்தை **
    பெரு மகள் பேதை மங்கை *
    தன்னொடும் பிரிவு இலாத *
    திருமகள் மருவும் நாங்கூர்த் *
    திருமணிக்கூடத்தானே 5
  • PT 4.5.6
    1293 கெண்டையும் குறளும் புள்ளும் * கேழலும் அரியும் மாவும் *
    அண்டமும் சுடரும் அல்லா * ஆற்றலும் ஆய எந்தை **
    ஒண் திறல் தென்னன் ஓட * வட அரசு ஓட்டம் கண்ட *
    திண் திறலாளர் நாங்கூர்த் * திருமணிக்கூடத்தானே 6
  • PT 4.5.7
    1294 குன்றமும் வானும் மண்ணும் *
    குளிர் புனல் திங்களோடு *
    நின்ற வெம் சுடரும் அல்லா *
    நிலைகளும் ஆய எந்தை **
    மன்றமும் வயலும் காவும் *
    மாடமும் மணங் கொண்டு * எங்கும்
    தென்றல் வந்து உலவும் நாங்கூர்த் *
    திருமணிக்கூடத்தானே 7
  • PT 4.5.8
    1295 சங்கையும் துணிவும் பொய்யும் *
    மெய்யும் இத் தரணி ஓம்பும் *
    பொங்கிய முகிலும் அல்லாப் *
    பொருள்களும் ஆய எந்தை **
    பங்கயம் உகுத்த தேறல் *
    பருகிய வாளை பாய *
    செங் கயல் உகளும் நாங்கூர்த் *
    திருமணிக்கூடத்தானே 8
  • PT 4.5.9
    1296 பாவமும் அறமும் வீடும் *
    இன்பமும் துன்பம் தானும் *
    கோவமும் அருளும் அல்லாக் *
    குணங்களும் ஆய எந்தை **
    மூவரில் எங்கள் மூர்த்தி *
    இவன் என முனிவரோடு *
    தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த் *
    திருமணிக்கூடத்தானே 9
  • PT 4.5.10
    1297 ## திங்கள் தோய் மாட நாங்கூர்த் *
    திருமணிக்கூடத்தானை *
    மங்கையர் தலைவன் வண் தார்க் *
    கலியன் வாய் ஒலிகள் வல்லார் **
    பொங்கு நீர் உலகம் ஆண்டு *
    பொன் உலகு ஆண்டு * பின்னும்
    வெம் கதிர்ப் பரிதி வட்டத்து
    ஊடு போய் * விளங்குவாரே 10