Chapter 10

Thiruvelliyangudi - (ஆய்ச்சியர் அழைப்ப)

திருவெள்ளியங்குடி
Thiruvelliyangudi - (ஆய்ச்சியர் அழைப்ப)
This village is located five miles from Anaikkarai on the Mayavaram-Kumbakonam route. The Lord of Thiruvazhundur appeared and granted darshan to the āzhvār, who was distressed due to being unable to have the Lord's darshan at Thiruvindalur.
இவ்வூர் மாயவரம்-கும்பகோணம் பிரிவில் அணைக்கரைக்கு ஐந்து மைல் தொலைவில் இருக்கிறது. திருவிந்தளூரில் பெருமாள் சேவை கிடைக்காமையால் வருந்திய ஆழ்வாரை இவ்வூர்ப் பெருமாள் அழைத்துத் தரிசனம் தந்தருளினார்.
Verses: 1338 to 1347
Grammar: Eḻuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will rule this world surrounded by the wide oceans under a royal umbrella and become gods in the sky
  • PT 4.10.1
    1338 ## ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால் *
    ஆல் இலை வளர்ந்த எம் பெருமான் *
    பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் *
    பெரு நிலம் அளந்தவன் கோயில் **
    காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் *
    எங்கும் ஆம் பொழில்களின் நடுவே *
    வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால் *
    திருவெள்ளியங்குடி அதுவே 1
  • PT 4.10.2
    1339 ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு *
    அரக்கர் தம் சிரங்களை உருட்டி *
    கார் நிறை மேகம் கலந்தது ஓர் உருவக் *
    கண்ணனார் கருதிய கோயில் **
    பூ நிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி *
    பொதும்பிடை வரி வண்டு மிண்டி *
    தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும் *
    திருவெள்ளியங்குடி அதுவே 2
  • PT 4.10.3
    1340 கடு விடம் உடைய காளியன் தடத்தைக் *
    கலக்கி முன் அலக்கழித்து * அவன் தன்
    படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப்
    பல் நடம் பயின்றவன் கோயில் **
    பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் *
    பயிற்றிய நாடகத்து ஒலி போய் *
    அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும் *
    திருவெள்ளியங்குடி அதுவே 3
  • PT 4.10.4
    1341 கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த *
    காளமேகத் திரு உருவன் *
    பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற *
    பரமனார் பள்ளிகொள் கோயில் **
    துறைதுறைதோறும் பொன் மணி சிதறும் *
    தொகு திரை மண்ணியின் தென்பால் *
    செறி மணி மாடக் கொடி கதிர் அணவும் *
    திருவெள்ளியங்குடி அதுவே 4
  • PT 4.10.5
    1342 பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து *
    பாரதம் கையெறிந்து * ஒருகால்
    தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த *
    செங் கண் மால் சென்று உறை கோயில் **
    ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி *
    எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி *
    சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற *
    திருவெள்ளியங்குடி அதுவே 5
  • PT 4.10.6
    1343 காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை உறக் *
    கடல் அரக்கர் தம் சேனை *
    கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த *
    கோல வில் இராமன் தன் கோயில் **
    ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் *
    ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி *
    சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் *
    திருவெள்ளியங்குடி அதுவே 6
  • PT 4.10.7
    1344 ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த *
    மாவலி வேள்வியில் புக்கு *
    தெள்ளிய குறள் ஆய் மூவடி கொண்டு *
    திக்கு உற வளர்ந்தவன் கோயில் *
    அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் *
    அரி அரி என்று அவை அழைப்ப *
    வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான் *
    திருவெள்ளியங்குடி அதுவே 7
  • PT 4.10.8
    1345 முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் * அசுரர்
    தம் பெருமானை * அன்று அரி ஆய்
    மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட *
    மாயனார் மன்னிய கோயில் **
    படியிடை மாடத்து அடியிடைத் தூணில் *
    பதித்த பல் மணிகளின் ஒளியால் *
    விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய *
    திருவெள்ளியங்குடி அதுவே 8
  • PT 4.10.9
    1346 குடி குடி ஆகக் கூடி நின்று அமரர் *
    குணங்களே பிதற்றி நின்று ஏத்த *
    அடியவர்க்கு அருளி அரவு அணைத் துயின்ற *
    ஆழியான் அமர்ந்து உறை கோயில் **
    கடி உடைக் கமலம் அடியிடை மலரக் *
    கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய *
    வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும் *
    வயல் வெள்ளியங்குடி அதுவே 9
  • PT 4.10.10
    1347 ## பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால் *
    பார் இடந்து எயிற்றினில் கொண்டு *
    தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற *
    திருவெள்ளியங்குடியானை **
    வண்டு அறை சோலை மங்கையர் தலைவன் *
    மான வேல் கலியன் வாய் ஒலிகள் *
    கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள் *
    ஆள்வர் இக் குரை கடல் உலகே 10