Chapter 1

Songs of pain from separation - (குன்றம் ஒன்று)

பிரிவு ஆற்றாத தலைவி இரங்கிக் கூறுதல்
Songs of pain from separation - (குன்றம் ஒன்று)
In this section, Āzhvār, assuming the state of the divine consort (*Pirāṭṭi*), expresses the pain of separation (*viraha-tāpam*) caused by elements like the breeze. Āzhvār sings, pointing out how the very Supreme Lord—who incarnated as **Rāma** and **Kṛṣṇa** to uplift the world—now becomes the cause of suffering for them.
ஆழ்வார் பிராட்டி நிலையில் இருந்துகொண்டு பாடும் இப்பகுதியில், தென்றல் முதலானவற்றால் தமக்கு ஏற்பட்டிருக்கும் பிரிவு நோயை வெளிப்படுத்துகிறார்; இராமனாகவும் கண்ணனாகவும் அவதரித்து உலகை வாழ்வித்த பெருமான் தமக்குத் துன்பம் தருவதைச் சுட்டிக் காட்டிப் பாடுகிறார்.
Verses: 1952 to 1961
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Recital benefits: Getting freed from all hurdles
  • PT 11.1.1
    1952 ## குன்றம் ஒன்று எடுத்து ஏந்தி * மா மழை
    அன்று காத்த அம்மான் ** அரக்கரை
    வென்ற வில்லியார் * வீரமே கொலோ *
    தென்றல் வந்து * தீ வீசும்? என் செய்கேன்
  • PT 11.1.2
    1953 காரும் வார் பனிக் * கடலும் அன்னவன் *
    தாரும் மார்வமும் * கண்ட தண்டமோ **
    சோரும் மா முகில் * துளியினூடு வந்து *
    ஈர வாடை தான் * ஈரும் என்னையே?
  • PT 11.1.3
    1954 சங்கும் மாமையும் * தளரும் மேனிமேல் *
    திங்கள் வெம் கதிர் * சீறும் என் செய்கேன்? **
    பொங்கு வெண் திரைப் * புணரி வண்ணனார் *
    கொங்கு அலர்ந்த தார் * கூவும் என்னையே
  • PT 11.1.4
    1955 அங்கு ஓர் ஆய்க்குலத்துள் * வளர்ந்து சென்று *
    அங்கு ஓர் * தாய் உரு ஆகி வந்தவள் *
    கொங்கை நஞ்சு உண்ட * கோயின்மை கொலோ *
    திங்கள் வெம் கதிர் * சீறுகின்றதே?
  • PT 11.1.5
    1956 அங்கு ஓர் ஆள் அரி ஆய் * அவுணனை
    பங்கமா * இரு கூறு செய்தவன் **
    மங்குல் மா மதி * வாங்கவே கொலோ *
    பொங்கு மா கடல் * புலம்புகின்றதே?
  • PT 11.1.6
    1957 சென்று வார் * சிலை வளைத்து * இலங்கையை
    வென்ற வில்லியார் * வீரமே கொலோ **
    முன்றில் பெண்ணைமேல் * முளரிக் கூட்டகத்து *
    அன்றிலின் குரல் * அடரும் என்னையே?
  • PT 11.1.7
    1958 பூவை வண்ணனார் * புள்ளின்மேல் வர *
    மேவி நின்று நான் * கண்ட தண்டமோ **
    வீவு இல் ஐங்கணை * வில்லி அம்பு கோத்து *
    ஆவியே இலக்கு ஆக எய்வதே?
  • PT 11.1.8
    1959 மால் இனம் துழாய் * வரும் என் நெஞ்சகம் *
    மாலின் அம் துழாய் * வந்து என் உள்புக **
    கோல வாடையும் * கொண்டு வந்தது ஓர் *
    ஆலி வந்ததால் * அரிது காவலே
  • PT 11.1.9
    1960 கெண்டை ஒண் கணும் துயிலும் * என் நிறம்
    பண்டு பண்டு போல் ஒக்கும் ** மிக்க சீர்த்
    தொண்டர் இட்ட * பூந் துளவின் வாசமே *
    வண்டு கொண்டுவந்து * ஊதுமாகிலே
  • PT 11.1.10
    1961 ## அன்று பாரதத்து * ஐவர் தூதனாய் *
    சென்ற மாயனைச் * செங் கண் மாலினை **
    மன்றில் ஆர் புகழ் * மங்கை வாள் கலி
    கன்றி * சொல் வல்லார்க்கு * அல்லல் இல்லையே