PMT 10.4

சித்திரகூடத்தானைக் கண்டோர்க்கு நிகரில்லை

744 தொத்தலர்பூஞ்சுரிகுழல்கைகேசிசொல்லால் *
தொன்னகரந்துறந்து * துறைக்கங்கைதன்னை
பத்தியுடைக்குகன்கடத்தவனம்போய்ப்புக்குப்
பரதனுக்குபாதுகமுமரசுமீந்து *
சித்திரகூடத்திருந்தான்றன்னை இன்று *
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
எத்தனையும்கண்குளிரக்காணப்பெற்ற
இருநிலத்தார்க்கு இமையவர்நேரொவ்வார்தாமே.
744 தொத்து அலர் பூஞ் சுரிகுழல் கைகேசி சொல்லால் * தொல் நகரம் துறந்து துறைக் கங்கை தன்னை *
பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்குப் * பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து **
சித்திரகூடத்து இருந்தான் தன்னை * இன்று தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற * இருநிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே (4)
744 tŏttu alar pūñ curikuzhal kaikeci cŏllāl * tŏl nakaram tuṟantu tuṟaik kaṅkai taṉṉai *
patti uṭaik kukaṉ kaṭatta vaṉam poyp pukkup * parataṉukkup pātukamum aracum īntu **
cittirakūṭattu iruntāṉ taṉṉai * iṉṟu tillai nakart tiruccitrakūṭan taṉṉul̤ *
ĕttaṉaiyum kaṇkul̤irak kāṇap pĕṟṟa * irunilattārkku imaiyavar ner ŏvvār tāme (4)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

744. As Rāma he left his kingdom, obeying the words of Kaikeyi whose curly hair was decorated with bunches of fresh flowers, went to the forest, crossed the Ganges with the help of Guhan, his dear devotee, and gave his sandals and his kingdom to Bharathan when his brother came to see him. He stays in beautiful Thiruchitrakudam in Thillai. If devotees see him happily with their two eyes, they will be equal to the gods in the sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தொத்து அலர் கொத்தான மலர்களை; பூஞ் சுரிகுழல் சூடிய சுருண்ட கூந்தலையுடைய; கைகேசி சொல்லால் கைகேயி சொன்னதால்; தொல் பழமையான; நகரம் துறந்து நகரத்தை விட்டு; கங்கை கங்கையின்; துறைதன்னை துறையை; பத்தி உடை பக்தி மிக்க; குகன் கடத்த குகன் கடக்க உதவ; வனம் போய்ப் புக்கு காட்டிற்போய்ச் சேர்ந்து; பரதனுக்கு பாதுகமும் பரதனுக்குப் பாதுகையும்; அரசும் ஈந்து ராஜ்யத்தையும் கொடுத்து; சித்திரகூடத்து சித்ரகூடத்தில்; இருந்தான் தன்னை இருந்தவனை; இன்று இப்பொழுது; தில்லை நகர் தில்லை நகர்; திருச்சித்ரகூடம் சித்ரகூடம்; தன்னுள் என்னும் தலத்தில்; எத்தனையும் கண் முழுதுமாக கண்; குளிர குளிரும்படி; காணப் பெற்ற காணப் பெற்ற; இரு சிறந்த; நிலத்தார்க்கு பூலோகத்தினர்களுக்கு; இமையவர் தேவர்களும்; நேர் ஒவ்வார்தாமே சமம் ஆகார்

Āchārya Vyākyānam

தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால் தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் எத்தனையும் கண் குளிர காண பெற்ற இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே— 10-4–

பதவுரை

தொத்து அலர் பூ சுரி குழல்–கொத்துக் கொத்தாக மலர்ந்த புஷ்பங்களைச்

+ Read more