Puruṣottama is the One Who is Denoted by the Praṇava
பிரணவத்தினால் சொல்லப்படுகிறவன் புருடோத்தமன்
400 மூன்றெழுத்ததனைமூன்றெழுத்ததனால்
மூன்றெழுத்தாக்கி * மூன்றெழுத்தை
ஏன்றுகொண்டிருப்பார்க்குஇரக்கம்நன்குடைய
எம்புருடோ த்தமனிருக்கை *
மூன்றடிநிமிர்த்துமூன்றினில்தோன்றி
மூன்றினில்மூன்றுருவானான் *
கான்தடம்பொழில்சூழ்கங்கையின்கரைமேல்
கண்டமென்னும்கடிநகரே. (2)