Chapter 5

Yashoda calls a crow to come to help her to comb Kannan's hair - (பின்னை மணாளனை)

குழல்வாரக் காக்கையை வா எனல்
Yashoda calls a crow to come to help her to comb Kannan's hair - (பின்னை மணாளனை)
Raising a child is indeed a battle. Somehow, the mother managed to bathe the unruly Krishna by speaking sweet words. She then thought of combing his hair and making him look beautiful. Krishna, trying to escape from his mother's grasp, wanted to run away. "Crow, come! Come and comb Krishna's hair!" she called out to a crow, diverting Krishna's attention. In this way, she managed to comb his hair, and the āzhvār also experiences this joy.
குழந்தையை வளர்ப்பது பெறும் போர்தான். கட்டுப்படாத கண்ணனை நயமான வார்த்தைகளைக் கூறி எப்படியோ நீராட்டி விட்டாள் தாய். கூந்தலை வாரி அழகு செய்விக்க எண்ணினாள். கண்ணன் தாயின் பிடியிலிருந்து விடுவித்துக் கோண்டு ஓட நினைக்கிறான். "காக்காய் வா! கண்ணனுக்குக் குழல் வார வா!" என்று காக்கையை அழைத்துக் கண்ணனின் கவனத்தைத் திருப்புகிறாள். இவ்வாறு சீராட்டிக் குழல் வாரியதை ஆழ்வாரும் அனுபவிக்கிறார்.
Verses: 162 to 171
Grammar: Kaliththāḻisai, Taravu Kocchakakkalippā / கலித்தாழிசை, தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Getting rid of all your bad karma
  • PAT 2.5.1
    162 ## பின்னை மணாளனைப் * பேரில் கிடந்தானை *
    முன்னை அமரர் * முதல் தனி வித்தினை **
    என்னையும் எங்கள் * குடி முழுது ஆட்கொண்ட *
    மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய் * மாதவன்தன் குழல்வாராய் அக்காக்காய் (1)
  • PAT 2.5.2
    163 பேயின் முலை உண்ட * பிள்ளை இவன் முன்னம் *
    மாயச் சகடும் * மருதும் இறுத்தவன் **
    காயாமலர் வண்ணன் * கண்ணன் கருங்குழல் *
    தூய்து ஆக வந்து குழல்வாராய் அக்காக்காய் * தூமணி வண்ணன் குழல்வாராய் அக்காக்காய் (2)
  • PAT 2.5.3
    164 திண்ணக் கலத்தில் * திரை உறிமேல் வைத்த *
    வெண்ணெய் விழுங்கி * விரைய உறங்கிடும்
    அண்ணல் ** அமரர் பெருமானை * ஆயர்தம்
    கண்ணனை வந்து குழல்வாராய் அக்காக்காய் * கார்முகில் வண்ணன் குழல்வாராய் அக்காக்காய் (3)
  • PAT 2.5.4
    165 பள்ளத்தில் மேயும் * பறவை உருக் கொண்டு *
    கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு **
    புள் இது என்று * பொதுக்கோ வாய் கீண்டிட்ட *
    பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய் * பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய் (4)
  • PAT 2.5.5
    166 கற்றினம் மேய்த்துக் * கனிக்கு ஒரு கன்றினைப் *
    பற்றி எறிந்த * பரமன் திருமுடி **
    உற்றன பேசி * நீ ஓடித் திரியாதே *
    அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய் * ஆழியான்தன் குழல்வாராய் அக்காக்காய் (5)
  • PAT 2.5.6
    167 கிழக்கில் குடி மன்னர் * கேடு இலாதாரை *
    அழிப்பான் நினைந்திட்டு * அவ் ஆழிஅதனால் **
    விழிக்கும் அளவிலே * வேர் அறுத்தானைக் *
    குழற்கு அணி ஆகக் குழல்வாராய் அக்காக்காய் * கோவிந்தன்தன் குழல்வாராய் அக்காக்காய் (6)
  • PAT 2.5.7
    168 பிண்டத் திரளையும் * பேய்க்கு இட்ட நீர்ச் சோறும் *
    உண்டற்கு வேண்டி * நீ ஓடித் திரியாதே **
    அண்டத்து அமரர் * பெருமான் அழகு அமர் *
    வண்டு ஒத்து இருண்ட குழல்வாராய் அக்காக்காய் * மாயவன்தன் குழல்வாராய் அக்காக்காய் (7)
  • PAT 2.5.8
    169 உந்தி எழுந்த * உருவ மலர்தன்னில் *
    சந்தச் சதுமுகன் * தன்னைப் படைத்தவன் **
    கொந்தக் குழலைக் * குறந்து புளி அட்டி *
    தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய் * தாமோதரன்தன் குழல்வாராய் அக்காக்காய் (8)
  • PAT 2.5.9
    170 மன்னன்தன் தேவிமார் * கண்டு மகிழ்வு எய்த *
    முன் இவ் உலகினை * முற்றும் அளந்தவன் **
    பொன்னின் முடியினைப் * பூ அணைமேல் வைத்து *
    பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய் * பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய் (9)
  • PAT 2.5.10
    171 ## கண்டார் பழியாமே * அக்காக்காய் * கார்வண்ணன்
    வண்டு ஆர் குழல்வார வா * என்ற ஆய்ச்சி சொல் **
    விண் தோய் மதிள் * வில்லிபுத்தூர்க் கோன் பட்டன் சொல் *
    கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே (10)