Chapter 3

Yashoda's lullaby for Kannan - (மாணிக்கம் கட்டி)

தாலப் பருவம்
Yashoda's lullaby for Kannan - (மாணிக்கம் கட்டி)
These hymns are a good guide for women of today who’ve borne and raised children! Shouldn’t lullabies be all about Him as well!
Songs on Him can be sung as lullabies as well! It is for sure that those children who grow up listening to such lullabies will receive His blessings. Divine Mother Yashoda says that those children will never experience pain and suffering in their life.
மக்கட் பேறு பெற்று மகிழும் இக்காலப் பெண்களுக்கு நல்ல வழிகாட்டி! தாலாட்டுப் பாடலிலும் பகவத் விஷயம் கலந்திருக்க வேண்டாமா!
இப்பாடல்களையே தாலாட்டுப் பாடல்களாகப் பாடலாமே! இப்பாடல்களைக் கேட்டுப் பழகும் குழந்தைகள் பகவானின் திருவருளைப் பெருவது திண்ணம். அவர்களுக்கு வாழ்வில் துன்பமே ஏற்படாது என்கிறாள் தெய்வ நங்கை யசோதை!
Verses: 44 to 53
Grammar: Kaliththāḻisai, Taravu Kocchakakkalippā / கலித்தாழிசை, தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Getting freed from all hurdles
  • PAT 1.3.1
    44 ## மாணிக்கம் கட்டி * வயிரம் இடை கட்டி *
    ஆணிப் பொன்னால் செய்த * வண்ணச் சிறுத்தொட்டில் **
    பேணி உனக்குப் * பிரமன் விடுதந்தான் *
    மாணிக் குறளனே தாலேலோ * வையம் அளந்தானே தாலேலோ (1)
  • PAT 1.3.2
    45 உடையார் கனமணியோடு * ஒண் மாதுளம்பூ *
    இடை விரவிக் கோத்த * எழில் தெழ்கினோடும் **
    விடை ஏறு காபாலி * ஈசன் விடுதந்தான் *
    உடையாய் அழேல் அழேல் தாலேலோ * உலகம் அளந்தானே தாலேலோ (2)
  • PAT 1.3.3
    46 என் தம்பிரானார் * எழில் திருமார்வர்க்கு *
    சந்தம் அழகிய * தாமரைத் தாளர்க்கு **
    இந்திரன் தானும் * எழில் உடைக் கிண்கிணி *
    தந்து உவனாய் நின்றான் தாலேலோ * தாமரைக் கண்ணனே தாலேலோ (3)
  • PAT 1.3.4
    47 சங்கின் வலம்புரியும் * சேவடிக் கிண்கிணியும் *
    அங்கைச் சரிவளையும் * நாணும் அரைத்தொடரும் **
    அங்கண் விசும்பில் * அமரர்கள் போத்தந்தார் *
    செங்கண் கருமுகிலே தாலேலோ * தேவகி சிங்கமே தாலேலோ (4)
  • PAT 1.3.5
    48 எழில் ஆர் திருமார்வுக்கு * ஏற்கும் இவை என்று *
    அழகிய ஐம்படையும் * ஆரமும் கொண்டு **
    வழு இல் கொடையான் * வயிச்சிராவணன் *
    தொழுது உவனாய் நின்றான் தாலேலோ * தூமணி வண்ணனே தாலேலோ (5)
  • PAT 1.3.6
    49 ஓதக் கடலின் * ஒளிமுத்தின் ஆரமும் *
    சாதிப் பவளமும் * சந்தச் சரிவளையும் **
    மா தக்க என்று * வருணன் விடுதந்தான் *
    சோதிச் சுடர் முடியாய் தாலேலோ * சுந்தரத் தோளனே தாலேலோ (6)
  • PAT 1.3.7
    50 கான் ஆர் நறுந்துழாய் * கைசெய்த கண்ணியும் *
    வான் ஆர் செழுஞ்சோலைக் * கற்பகத்தின் வாசிகையும் **
    தேன் ஆர் மலர்மேல் * திருமங்கை போத்தந்தாள் *
    கோனே அழேல் அழேல் தாலேலோ * குடந்தைக் கிடந்தானே தாலேலோ (7)
  • PAT 1.3.8
    51 கச்சொடு பொற்சுரிகை * காம்பு கனகவளை *
    உச்சி மணிச்சுட்டி * ஒண்தாள் நிரைப் பொற்பூ **
    அச்சுதனுக்கு என்று * அவனியாள் போத்தந்தாள் *
    நச்சுமுலை உண்டாய் தாலேலோ * நாராயணா அழேல் தாலேலோ (8)
  • PAT 1.3.9
    52 மெய் திமிரும் நானப் பொடியொடு மஞ்சளும் *
    செய்ய தடங்கண்ணுக்கு * அஞ்சனமும் சிந்துரமும் **
    வெய்ய கலைப்பாகி * கொண்டு உவளாய் நின்றாள் *
    ஐயா அழேல் அழேல் தாலேலோ * அரங்கத்து அணையானே தாலேலோ (9)
  • PAT 1.3.10
    53 ## வஞ்சனையால் வந்த * பேய்ச்சி முலை உண்ட *
    அஞ்சன வண்ணனை * ஆய்ச்சி தாலாட்டிய **
    செஞ்சொல் மறையவர் சேர் * புதுவைப் பட்டன் சொல் *
    எஞ்சாமை வல்லவர்க்கு * இல்லை இடர்தானே (10)