Chozha Nādu·Temple 36 of 108

Thirutthetri ambalam

திருத்தெற்றியம்பலம்

Thiru Nāngur

ஸ்ரீ செங்கமலவல்லீ ஸமேத ஸ்ரீ செங்கண்மால் ஸ்வாமிநே நமஹ
Image 1
36
Presiding Deities
MoolavarSenkan Māl Ranganāthan, Sri Lakshmirangar
ThāyārSri Senkamala Valli
UtsavarAranganāthan
Sayana (Reclining)Faces East Directions
VimānamVedha
PushkaraniSoorya
ThirukolamSayana (Reclining)
DirectionEast
Location
MandalamChozha Nādu
AreaSeerkaazhi
StateTamilNadu
Tradition
SampradāyamThenkalai
Festivals & Timings
Timings8:00 a.m. to 1:00 p.m. 3:00 p.m. to 8:00 p.m. (Please take the archaga from their home for darshan.)
Recitation
Translation

PT 4.4.1

1278 மாற்றரசர்மணிமுடியும்திறலும்தேசும்

மற்றவர்தம்காதலிமார்குழையும் * தந்தை

கால்தளையும்உடன்கழலவந்துதோன்றிக்

கதநாகம்காத்தளித்தகண்ணர்கண்டீர் *

நூற்றிதழ்கொளரவிந்தம்நுழைந்தபள்ளத்து

இளங்கமுகின்முதுபாளைபகுவாய்நண்டின் *

சேற்றளையில்வெண்முத்தம்சிந்து நாங்கூர்த்

திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே. (2)

PT 4.4.2

1279 பொற்றொடித்தோள்மடமகள்தன்வடிவுகொண்ட

பொல்லாதவன்பேய்ச்சிகொங்கைவாங்கி *

பெற்றெடுத்ததாய்போலமடுப்பஆரும்

பேணாநஞ்சுண்டுகந்தபிள்ளைகண்டீர் *

நெல்தொடுத்தமலர்நீலம்நிறைந்தசூழல்

இருஞ்சிறையவண்டொலியும்நெடுங்கணார்தம் *

சிற்றடிமேல்சிலம்பொலியும்மிழற்றுநாங்கூர்த்

திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.

PT 4.4.3

1280 படலடைந்தசிறுகுரம்பைநுழைந்துபுக்குப்

பசுவெண்ணெய்பதமாரப்பண்ணைமுற்றும் *

அடலடர்த்தவேற்கண்ணார்தோக்கை பற்றி

அலந்தலைமைசெய்துழலும்ஐயன்கண்டீர் *

மடலெடுத்தநெடுந்தெங்கின்பழங்கள்வீழ

மாங்கனிகள்திரட்டுருட்டாவருநீர்ப்பொன்னி *

திடலெடுத்துமலர்சுமந்துஅங்குஇழியும்நாங்கூர்த்

திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.

PT 4.4.4

1281 வாராரும்முலைமடவாள்பின்னைக்காகி

வளைமருப்பிற்கடுஞ்சினத்துவன்தாளார்ந்த *

காரார்திண்விடையடர்த்துவதுவையாண்ட

கருமுகில்போல்திருநிறத்துஎன்கண்ணர்கண்டீர் *

ஏராரும்மலர்ப்பொழில்கள்தழுவிஎங்கும்

எழில்மதியைக்கால்தொடரவிளங்குசோதி *

சீராருமணிமாடம்திகழும்நாங்கூர்த்

திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.

PT 4.4.5

1282 கலையிலங்கும்அகலல்குல்கமலப்பாவை

கதிர்முத்தவெண்ணகையாள்கருங்கணாய்ச்சி *

முலையிலங்கும்ஒளிமணிப்பூண்வடமும்தேய்ப்ப

மூவாதவரைநெடுந்தோள்மூர்த்திகண்டீர் *

மலையிலங்குநிரைச்சந்திமாடவீதி

ஆடவரைமடமொழியார்முகத்து * இரண்டு

சிலைவிலங்கிமனஞ்சிறைகொண்டிருக்கும்நாங்கூர்த்

திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.

PT 4.4.6

1283 தான்போலும்ஏன்றெழுந்தான்தரணியாளன்

அதுகண்டுதரித்திருப்பான் அரக்கர்தங்கள் *

கோன்போலும்ஏன்றெழுந்தான், குன்றமன்ன

இருபதுதோளுடன்துணித்தஒருவன்கண்டீர் *

மான்போலுமென்னோக்கின்செய்யவாயார்

மரகதம்போல்மடக்கிளியைக்கைமேற்கொண்டு *

தேன்போலுமென்மழலைபயிற்றும்நாங்கூர்த்

திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.

PT 4.4.7

1284 பொங்கிலங்குபுரிநூலும்தோலும்தாழப்

பொல்லாதகுறளுருவாய்ப்பொருந்தாவாணன் *

மங்கலம்சேர்மறைவேள்வியதனுள்புக்கு

மண்ணகலம்குறையிரந்தமைந்தன்கண்டீர் *

கொங்கலர்ந்தமலர்க்குழலார்கொங்கைதோய்ந்த

குங்குமத்தின்குழம்பளைந்தகோலந்தன்னால் *

செங்கலங்கல்வெண்மணல்மேல்தவழும்நாங்கூர்த்

திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.

PT 4.4.8

1285 சிலம்பினிடைச்சிறுபரல்போல்பெரியமேரு

திருக்குளம்பில்கணகணப்பத் திருவாகாரம்

குலுங்க * நிலமடந்தைதனைஇடந்துபுல்கிக்

கோட்டிடைவைத்தருளியஎங்கோமான்கண்டீர் *

இலங்கிய நான்மறையனைத்தும்அங்கமாறும்

ஏழிசையும்கேள்விகளும்எண்திக்கெங்கும் *

சிலம்பியநற்பெருஞ்செல்வம்திகழும்நாங்கூர்த்

திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே. 8

PT 4.4.9

1286 ஏழுலகும்தாழ்வரையும்எங்குமூடி

எண்டிசையும்மண்டலமும்மண்டி * அண்டம்

மோழையெழுந்து ஆழிமிகும் ஊழிவெள்ளம்

முன்னகட்டிலொடுக்கிய எம்மூர்த்திகண்டீர் *

ஊழிதொறும் ஊழிதொறுமுயர்ந்தசெல்வத்து

ஓங்கியநான்மறையனைத்தும் தாங்குநாவர் *

சேழுயர்ந்தமணிமாடம்திகழும்நாங்கூர்த்

திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.