Chapter 3

Āzhvār’s yearning and eagerness to uninterruptedly enjoy with devotees - (ஊனில் வாழ்)

அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல்

Āzhvār deems that there is no one in this world who deserves to enjoy the bliss of reuniting with the primordial Being after a long separation; he realizes that there is no one deserving in this mortal world filled with those who are more inclined to run after money and clothes; Āzhvār’s yearning and his eagerness awaiting for the day he joins the nithya

+ Read more

ஆதாம் பகவானைப் பிரிந்த ஆற்றாமை தீர, பகவான் வந்து கலந்ததாலுண்டான இன்பத்தை அனுபவிக்க இவ்வுகில் யாரேனும் உளரோ என்று நம்மாழ்வார் சிந்தித்தார்; உண்டியே உடையே என்று உகந்து ஓடும் இவ்வுலகில் ஒருவரும் இல்லை என்பதை அறிந்தார்; நித்ய சூரிகளின் கூட்டத்தில் புகுந்து பகவானை இடைவிடாமல் அனுபவிக்கும்

+ Read more
Verses: 2923 to 2933
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: நாட்டம்
Timing: 12-1.12 PM
Recital benefits: will be happy
  • TVM 2.3.1
    2923 ## ஊனில் வாழ் உயிரே * நல்லை போ உன்னைப் பெற்று
    வான் உளார் பெருமான் * மதுசூதன் என் அம்மான் **
    தானும் யானும் எல்லாம் * தன்னுள்ளே கலந்தொழிந்தோம் *
    தேனும் பாலும் நெய்யும் * கன்னலும் * அமுதும் ஒத்தே (1)
  • TVM 2.3.2
    2924 ஒத்தார் மிக்காரை * இலையாய மா மாய ! *
    ஒத்தாய் எப் பொருட்கும் உயிர் ஆய் ** என்னைப் பெற்ற
    அத் தாய் ஆய் தந்தை ஆய் * அறியாதன அறிவித்த *
    அத்தா! நீ செய்தன * அடியேன் அறியேனே (2)
  • TVM 2.3.3
    2925 அறியாக் காலத்துள்ளே * அடிமைக்கண் அன்பு செய்வித்து *
    அறியா மா மாயத்து * அடியேனை வைத்தாயால் **
    அறியாமைக் குறள் ஆய் * நிலம் மாவலி ! மூவடி என்று *
    அறியாமை வஞ்சித்தாய் * எனது ஆவியுள் கலந்தே (3)
  • TVM 2.3.4
    2926 எனது ஆவியுள் கலந்த * பெரு நல் உதவிக் கைம்மாறு *
    எனது ஆவி தந்தொழிந்தேன் * இனி மீள்வது என்பது உண்டே? **
    எனது ஆவி ஆவியும் நீ * பொழில் ஏழும் உண்ட எந்தாய் *
    எனது ஆவி யார்? யான் ஆர்? * தந்த நீ கொண்டாக்கினையே (4)
  • TVM 2.3.5
    2927 இனி யார் ஞானங்களால் * எடுக்கல் எழாத எந்தாய் *
    கனிவார் வீட்டு இன்பமே * என் கடல் படா அமுதே **
    தனியேன் வாழ் முதலே * பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் *
    நுனி ஆர் கோட்டில் வைத்தாய் * உன பாதம் சேர்ந்தேனே (5)
  • TVM 2.3.6
    2928 சேர்ந்தார் தீவினைகட்கு * அரு நஞ்சைத் திண் மதியை *
    தீர்ந்தார் தம் மனத்துப் * பிரியாது அவர் உயிரை **
    சோர்ந்தே போகல் கொடாச் சுடரை * அரக்கியை மூக்கு
    ஈர்ந்தாயை * அடியேன் அடைந்தேன் * முதல் முன்னமே (6)
  • TVM 2.3.7
    2929 முன் நல் யாழ் பயில் நூல் * நரம்பின் முதிர் சுவையே *
    பல் நலார் பயிலும் * பரனே பவித்திரனே **
    கன்னலே அமுதே! * கார் முகிலே !என் கண்ணா *
    நின் அலால் இலேன்காண் * என்னை நீ குறிக்கொள்ளே (7)
  • TVM 2.3.8
    2930 குறிக்கொள் ஞானங்களால் * எனை ஊழி செய் தவமும் *
    கிறிக்கொண்டு இப் பிறப்பே * சில நாளில் எய்தினன் யான் **
    உறிக்கொண்ட வெண்ணெய் பால் * ஒளித்து உண்ணும் அம்மான் பின் *
    நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப் * பிறவித் துயர் கடிந்தே (8)
  • TVM 2.3.9
    2931 கடி வார் தண் அம் துழாய்க் * கண்ணன் விண்ணவர் பெருமான் *
    படி வானம் இறந்த * பரமன் பவித்திரன் சீர் **
    செடி ஆர் நோய்கள் கெடப் * படிந்து குடைந்து ஆடி *
    அடியேன் வாய்மடுத்துப் * பருகிக் களித்தேனே (9)
  • TVM 2.3.10
    2932 களிப்பும் கவர்வும் அற்றுப் * பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று *
    ஒளிக்கொண்ட சோதியுமாய் * உடன்கூடுவது என்று கொலோ *
    துளிக்கின்ற வான் * இந் நிலம் * சுடர் ஆழி * சங்கு ஏந்தி *
    அளிக்கின்ற மாயப் பிரான் * அடியார்கள் குழாங்களையே? (10)
  • TVM 2.3.11
    2933 ## குழாம் கொள் பேர் அரக்கன் * குலம் வீய முனிந்தவனை *
    குழாம் கொள் தென் குருகூர்ச் * சடகோபன் தெரிந்து உரைத்த *
    குழாம் கொள் ஆயிரத்துள் * இவை பத்தும் உடன் பாடி *
    குழாங்களாய் அடியீர் உடன் * கூடிநின்று ஆடுமினே (11)