Chapter 10

Parvathi doing tapas to marry Shiva. - (மற்று இவை)

சிவனை திருமணம் செய்ய பார்வதி செய்யும் தபசு
Verses: 2750 to 2755
Grammar: Kaliveṇpā / கலிவெண்பா
  • PTM 10.38
    2750 மற்று இவை தான்
    என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்? *
    மன்னு மலை அரையன் பொன் பாவை * 40
  • PTM 10.39
    2751 வாள் நிலா மின்னும் அணி முறுவல் செவ் வாய் உமை என்னும் *
    அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர் *
    பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல *
    தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து * ஆங்கு
    அன்ன அருந் தவத்தின் ஊடு போய் * 41
  • PTM 10.40
    2752 ஆயிரம் தோள் மன்னு கரதலங்கள் மட்டித்து *
    மாதிரங்கள் மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால் *
    பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப *
    மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும் *
    தன்னின் உடனே சுழலச் சுழன்று ஆடும் *
    கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி *
    அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே? *
    பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் * 42
  • PTM 10.41
    2753 பாவியேற்கு என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின் *
    இரும் பொழில் சூழ் மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல் *
    பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு *
    என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் * 43
  • PTM 10.42
    2754 நோக்குதலும் மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும் *
    பன்னு கரதலமும் கண்களும் * பங்கயத்தின் 44
  • PTM 10.43
    2755 பொன் இயல் காடு ஓர் மணிவரைமேல் பூத்ததுபோல் *
    மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும் *
    மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும் *
    துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப *
    மன்னு மரதகக் குன்றின் மருங்கே * ஓர்
    இன் இள வஞ்சிக்கொடி ஒன்று நின்றதுதான் * 45