Chapter 7

The mother worries about her young daughter - (ஐய புழுதி)

நற்றாய் இரங்கல்
The mother worries about her young daughter - (ஐய புழுதி)
Just as a mother speaks of the suffering her daughter endures due to her love for Krishna, the āzhvār, embodying that mother, narrates and experiences these feelings. This hymn conveys the girl's condition, the words spoken about her by the townsfolk, and her desire to have her wedding in her own home, even though it is a small one (verse 10).
கண்ணன்மீது மையல் கொண்டு தன் மகள் படும்பாட்டைத் தாய் கூறுவதுபோல், ஆழ்வாரும் அப்பெண்ணின் தாயாகவே இருந்துகொண்டு கூறி அனுபவிக்கிறார். பெண்ணின் நிலை, அவளைப் பற்றி ஊரார் கூறும் சொல் ஆகியவற்றையும், தன் வீடு சிறிய வீடாக இருந்தாலும், பெண்ணின் திருமணத்தை வீட்டிலேயே செய்யவேண்டும் என்ற அவளது கருத்தையும் (பாடல் 10) இத்திருமொழி அறிவிக்கிறது.
Verses: 286 to 296
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Getting freed from all hurdles
  • PAT 3.7.1
    286 ## ஐய புழுதி உடம்பு அளைந்து * இவள் பேச்சும் அலந்தலையாய் *
    செய்ய நூலின் சிற்றாடை * செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள் **
    கையினில் சிறுதூதை யோடு * இவள் முற்றில் பிரிந்தும் இலள் *
    பை அரவணைப் பள்ளியானொடு * கைவைத்து இவள்வருமே (1)
  • PAT 3.7.2
    287 வாயில் பல்லும் எழுந்தில * மயிரும் முடி கூடிற்றில *
    சாய்வு இலாத குறுந்தலைச் * சில பிள்ளைகளோடு இணங்கி **
    தீ இணக்கு இணங்கு ஆடி வந்து * இவள் தன் அன்ன செம்மை சொல்லி *
    மாயன் மா மணிவண்ணன் மேல் * இவள் மால் உறுகின்றாளே (2)
  • PAT 3.7.3
    288 பொங்கு வெண்மணல் கொண்டு * சிற்றிலும் முற்றத்து இழைக்கலுறில் *
    சங்கு சக்கரம் தண்டு வாள் * வில்லும் அல்லது இழைக்கலுறாள் **
    கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில * கோவிந்தனோடு இவளை *
    சங்கை யாகி என் உள்ளம் * நாள்தொறும் தட்டுளுப்பு ஆகின்றதே (3)
  • PAT 3.7.4
    289 ஏழை பேதை ஓர் பாலகன் வந்து * என் பெண்மகளை எள்கி *
    தோழிமார் பலர் கொண்டுபோய்ச் செய்த * சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன் **
    ஆழியான் என்னும் ஆழ மோழையில் * பாய்ச்சி அகப்படுத்தி *
    மூழை உப்பு அறியாது என்னும் * மூதுரையும் இலளே (4)
  • PAT 3.7.5
    290 நாடும் ஊரும் அறியவே போய் * நல்ல துழாய் அலங்கல்
    சூடி * நாரணன் போம் இடம் எல்லாம் * சோதித்து உழி தருகின்றாள் **
    கேடு வேண்டுகின்றார் பலர் உளர் * கேசவனோடு இவளை *
    பாடிகாவல் இடுமின் என்று என்று * பார் தடுமாறினதே (5)
  • PAT 3.7.6
    291 பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து * இவள் பாடகமும் சிலம்பும் *
    இட்ட மாக வளர்த்து எடுத்தேனுக்கு * என்னோடு இருக்கலுறாள் **
    பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று * இவள் பூவைப் பூவண்ணா என்னும் *
    வட்ட வார் குழல் மங்கைமீர் * இவள் மால் உறுகின்றாளே (6)
  • PAT 3.7.7
    292 பேசவும் தரியாத பெண்மையின் * பேதையேன் பேதை இவள் *
    கூசமின்றி நின்றார்கள் * தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய் **
    கேசவா என்றும் கேடிலீ என்றும் * கிஞ்சுக வாய் மொழியாள் *
    வாச வார்குழல் மங்கைமீர் * இவள் மால் உறுகின்றாளே 7
  • PAT 3.7.8
    293 காறை பூணும் கண்ணாடி காணும் * தன் கையில் வளை குலுக்கும் *
    கூறை உடுக்கும் அயர்க்கும் * தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும் **
    தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த் * தேவன் திறம் பிதற்றும் *
    மாறில் மா மணிவண்ணன்மேல் * இவள் மால் உறுகின்றாளே (8)
  • PAT 3.7.9
    294 கைத்தலத்து உள்ள மாடு அழியக் * கண்ணாலங்கள் செய்து * இவளை
    வைத்து வைத்துக்கொண்டு என்ன வாணிபம்? * நம்மை வடுப்படுத்தும் **
    செய்த்தலை எழு நாற்றுப் போல் * அவன் செய்வன செய்துகொள்ள *
    மைத் தடமுகில் வண்ணன் பக்கல் * வளர விடுமின்களே (9)
  • PAT 3.7.10
    295 பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து * பேணி நம் இல்லத்துள்ளே *
    இருத்துவான் எண்ணி நாம் இருக்க * இவளும் ஒன்று எண்ணுகின்றாள் **
    மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும் * வார்த்தை படுவதன்முன் *
    ஒருப்படுத்து இடுமின் இவளை * உலகளந்தான் இடைக்கே (10)
  • PAT 3.7.11
    296 ## ஞாலம் முற்றும் உண்டு ஆலிலைத் துயில் * நாராயணனுக்கு * இவள்
    மாலதாகி மகிழ்ந்தனள் என்று * தாய் உரை செய்ததனை **
    கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்கோன் * விட்டுசித்தன் சொன்ன *
    மாலை பத்தும் வல்லவர்கட்கு * இல்லை வரு துயரே (11)