திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள் / Thiruppallāṇḍu, Periyāzhvār Thirumozhi Taṉiyaṉkal̤

மின்னார் தட மதிள் சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தானென்றுரைத்தோம், கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே வந்து

miṉṉār taṭa matil̤ cūḻ villiputtūrĕṉṟu ŏrukāl
cŏṉṉār kaḻaṟkamalam cūṭiṉom - muṉṉāl̤
kiḻiyaṟuttāṉĕṉṟuraittom, kīḻmaiyiṉiṟ cerum
vaḻiyaṟuttom nĕñcame vantu
பாண்டிய பட்டர் / pāṇṭiya paṭṭar
TPL.1.0.2.1
TPL.1.0.2.2
TPL.1.0.2.3
TPL.1.0.2.4

Word by word meaning

சொன்னார் கழல் கமலம் சூடினோம் முன்னாள்; மின்னார் தட ஒளிமயமான பெரிய; மதிள் சூழ் மதிள்களால் சூழ்ந்த; வில்லிபுத்தூர் வில்லிபுத்தூர்; என்று ஒருக்கால் என்று ஒருமுறையாகிலும்; சொன்னார் சொன்ன அடியார்களின்; கழல் கமலம் பாத கமலங்களை; சூடினோம் தலையில் சூடினோம்; முன்னாள் முன்பு பாண்டியமன்னன் ஏற்படுத்திய; சபையில் விஷ்ணுவே பரம் பொருள் என்று கூறி; கிழி அறுத்தான் பொற்கிழியை அறுத்தவர் பெரியாழ்வார்; என்று உறைத்தோம் என்று உறைத்தோம்; நெஞ்சமே வந்து நெஞ்சமே உன் அநுகூலத்துக்காக; கீழ் மேனிச் சேரும் நரகத்தில் சேரும்படியான; வழி மார்க்கத்தை; அறுத்தோம் அறுத்தோம் என்கிறார்