Chapter 4

The sages enter Indra’s world and enjoy it - (முன்னம் நான்)

முனிவர்கள் இந்திரனின் உலகில் நுழைந்து அதை அனுபவிக்கிறார்கள்.
Verses: 2722 to 2725
Grammar: Kaliveṇpā / கலிவெண்பா
  • PTM 4.10
    2722 முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற *
    அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன் *
    பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப * பொங்கு ஒளி சேர்
    கொல் நவிலும் கோள் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர் * 11
  • PTM 4.11
    2723 மன்னிய சிங்காசனத்தின்மேல் * வாள் நெடுங் கண்
    கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து * ஆங்கு
    இன் இளம் பூந் தென்றல் இயங்க * மருங்கு இருந்த 11
  • PTM 4.12
    2724 மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல் *
    முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப *
    அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர் *
    பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம் *
    மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை *
    இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர் *
    மன்னிய மா மயில் போல் கூந்தல் * மழைத் தடங் கண் 13
  • PTM 4.13
    2725
    மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து *
    மன்னும் மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின் *
    மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த *
    மன்னும் பவளக் கால் செம் பொன் செய் மண்டபத்துள் *
    அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த
    இன் இசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று * 14